districts

ஆண்டிப்பாளையம் ஏரியில் சுற்றுலாத்துறை அலுவலர்கள் ஆய்வு

திருப்பூர், ஜூலை 18- திருப்பூர் மாவட்டம் ஆண்டிப்பா ளையம் ஏரியில் முதல் கட்ட சுற்றுலா  வளர்ச்சி பணிகள் நிறைவடைந்துள் ளதை சுற்றுலாத்துறை அலுவலர்கள்  வியாழனன்று ஆய்வு மேற்கொண்ட னர்.

திருப்பூர் மாநகர பகுதி மக்கள்  செல்லும் வகையில், ஆண்டிப்பா ளையம் ஏரியில் சுற்றுலா வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள, தமிழ்நாடு  அரசு சுற்றுலாத்துறை சார்பில் ரூ.1.5  கோடி மதிப்பீட்டில் திட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில்,  படகு இல்லம், சிறுவர் பூங்கா, உணவ கம், குயிக் பைட்ஸ் (சிற்றுண்டி கடை), டிக்கெட் கொடுக்கும் மையம்,  குடிநீர் வசதிகள், மின்விளக்குகள், கழிவறைகள், வாகனம் நிறுத்து மிடம் போன்ற பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. இன்னும் சில நாட்களில் அனைத்து பணிகளும் முடியும் என தெரியவருகிறது. 

இந்நிலையில், மாவட்ட அலுவ லர்களுக்கான ஆய்வு கூட்டத்தில் ஆண்டிபாளையம் சுற்றுலா வளர்ச்சி  பணிகளை தரமாகவும், விரைவாக வும் முடித்திட மாவட்ட ஆட்சியர் சுற்று லாத்துறை அதிகாரிகளிடம் அறி வுறுத்தினார். இதுதொடர்பாக மாவட்ட சுற்றுலாத்துறை அலுவலர் அரவிந்த் குமார் தலைமையில் சுற் றுலா திட்ட நிபுணர்கள் ஆண்டி பாளையம் குளம் பகுதியில் நடை பெற்று வரும் சுற்றுலா வளர்ச்சி திட்ட  பணிகளை ஆய்வு மேற்கொண்டனர்.  படகு இல்லம் அமைக்கும் பணிகள் இன்னும் சில தினங்களில் நடைபெற உள்ளது. இந்நிலையில், எட்டு பேர் பயணிக்கும் விதமாக ஒரு மோட்டார் படகு ஆண்டிபாளையம் குளத்திற்கு வந்தடைந்தது. மேலும் ஒரு படகு இந்த வாரம் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஆய்வின்போது, தமிழ்நாடு  சுற்றுலா வளர்ச்சி கழக மண்டல மேலாளர் ,ஊட்டி குணேஸ்வரன், மேலாளர் முரளிதரன் மற்றும் சுற்றுலா திட்ட நிபுணர்கள் ஆகியோர்  உடன் இருந்தனர்.