திருப்பூர், ஜூலை 16- கட்டுமானம், உடல் உழைப்பு, தையல், ஆட்டோ, சுமைப்பணி உள் ளிட்ட 18 நல வாரியங்களில் பதிவு செய்திருந்த 72 லட்சம் தொழிலாளர் களின் கணினி தரவுகளை மீட்க வேண் டும். நலவாரிய பணப்பயன்களை உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உட்பட பல்வேறு கோரிக் கைகளை முன்வைத்து சிஐடியு சார் பில் திருப்பூர் மாவட்ட ஆட்சியரகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.
சிஐடியு மாவட்ட தலைவர் சி. மூர்த்தி தலைமையில் செவ்வா யன்று நடைபெற்ற இந்த ஆர்ப்பாட் டத்தில், முறைசாரா தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்த 72 லட்சம் தொழிலாளர்களின் தரவுகளை மீட்க வேண்டும். ஆன்லைன் செயலி முறையாக செயல்படும் வரை நேரடி யாக மனுக்களை பெறும் நடைமு றையை கொண்டு வர வேண்டும். தற் போது வழங்கப்படும் நலவாரிய உத வித் தொகைகள், அனைத்து வாரி யங்களிலும் பதிவு செய்துள்ள தொழி லாளர்களுக்கு ஒரே அளவில் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண் டும். மாவட்ட அலுவலகங்களில் தேங்கி கிடக்கும் அனைத்து மனுக்க ளையும் உடனடியாக பரிசீலனை செய்து உரிய காலத்தில் பணப்பயன் களை வழங்க வேண்டும். முறைசாரா தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் ரூ.3000 வழங்க வேண்டும். பெண் தொழிலாளர்களுக்கு 55 வயதில் ஓய் வூதியம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மகளிர் உரிமை தொகை பெறுவதை காரணம் காட்டி நலவாரிய ஓய்வூதியத்தை நிராக ரிக்க கூடாது. செயல்படாத பிஎப் கணக்கு இருப்பதனாலேயே முறை சாரா தொழிலாளராக பதிவு செய் வதை நிராகரிக்கும் போக்கை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக் கைகள் வலியுறுத்தி, சிஐடியு மாவட்டச் செயலாளர் கே.ரங்கராஜ், ஆட்டோ சங்க மாவட்ட செயலாளர் ஒய்.அன்பு, கட்டுமான சம்மேளன மாநில பொதுச்செயலாளர் டி. குமார், சுமைப்பணி தொழிலாளர் கள் சங்கச் செயலாளர் பி.பாலன் ஆகி யோர் கோரிக்கை குறித்துப் பேசினர். சிஐடியு மாவட்டத் துணைத் தலை வர் கே.உண்ணிகிருஷ்ணன், விசைத் தறி சங்க மாவட்டச்செயலாளர் வேலுச்சாமி, கைத்தறி சங்க மாவட் டச் செயலாளர் திருவேங்கடசாமி, மோட்டார் சங்க மாவட்ட தலைவர் விஸ்வநாதன், ஆட்டோ சங்க மாவட்ட தலைவர் சுகுமாரன், திருப் பூர் பொது தொழிலாளர் சங்கம் என். சுப்ரமணியம், அவிநாசி பொது தொழிலாளர் சங்கம் அ.ஈஸ்வர மூர்த்தி, தாராபுரம் பொது தொழிலா ளர் சங்கம் பொன்னுசாமி உட்பட திர ளானோர் பங்கேற்றனர்.