districts

img

வழக்குப் போட்டு வாழ்நாளெல்லாம் நீதிமன்றத்திற்கு அலைய விடுவேன்!

திருப்பூர் ஏப். 5 - வாகனச் சோதனையில் ஈடுபட முயன்ற பறக்கும் படையினரை, “வழக்குப் போட்டு வாழ்நாளெல்லாம் நீதிமன்றத்திற்கு அலைய விடு வேன்” என்று திருப்பூர் பாஜக வேட் பாளர் முருகானந்தம் மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி யில் பாஜக வேட்பாளராக முருகானந் தம் என்பவர் போட்டியிடுகிறார். இவர் ஏற்கெனவே மனைவியை தற் கொலைக்கு தூண்டிய குற்றச்சாட்டில் வழக்கைச் சந்தித்து வருபவர்.

அத்து டன் தொலைக்காட்சி விவாதங்களில், தரம் தாழ்ந்தும், அராஜகமாகவும் பேசக் கூடியவர் என்றும் பெயர் பெற்றவர். வேட்பு மனு தாக்கல் செய்யும் போது கூட, திருப்பூர் மாவட்ட ஆட்சி யரகத்திற்கு சட்டையைக் கழற்றி விட்டு உள்பனியனுடன் தட்டில் ஜமுக்காளம் மற்றும் நூலை ஏந்திக் கொண்டு வந்தார். பாஜகவின் பத்தாண்டு கால ஆட்சியில் தான், பனியன், பவானி ஜமுக்காளம் உள்ளிட்ட ஜவுளித் தொழில் சீரழிக்கப்பட்டது. அதனை மூடிமறைத்து, யாரோ காரணம்போல உள்பனியன் போட்டெல்லாம் வேஷம் கட்டினார்.

அத்துடன் விவசாய நிலத்தில் மாட்டைப் பிடித்து ஏர் உழு வதாகவும் போஸ் கொடுத்திருந்தார். இப்படி விதவிதமான வேஷம்  கட்டி எப்படியாவது ஓட்டு வாங்கிவிட வேண்டும் என்று தவித்து வரும் முரு கானந்தம், வெள்ளியன்று மற்றொரு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். திருப்பூர் நாடாளுமன்றத் தொகு திக்கு உட்பட்ட கோபிசெட்டிபாளை யத்தில், முருகானந்தம் சென்ற வாகனத்தை தேர்தல் நிலைக் குழு கண்காணிப்பு படையினர் இடது புறமாக ஓரத்தில் நிறுத்தி வாகனத் தணிக்கை செய்ய முயன்றனர்.  

அப்போதுதான், ஒன்றிய ஆட்சி யில் இருக்கும் பாஜகவின் வேட்பாள ரான தன்னையே சோதனை செய்வதா? என்ற ஆணவத்துடன் முருகானந்தம், வாகனத்தை நிறுத் திய காவல் உதவி ஆய்வாளரிடம் ‘என்னை தடுத்து நிறுத்தச் சொன் னார்களா?’ என்று மிரட்டும் தொனி யில் கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார். “எல்லா வாகனங்களையும் தணிக்கை செய்ய வேண்டும் என்பது எங்களுக்கு உத்தரவிடப்பட்ட பணி, எனவே தான் நிறுத்தினோம்” என்று  அதிகாரி பொறுப்புடன் கூறிய எந்த வார்த்தையையும் காதில் வாங்கா மல்,  காவல் உதவி ஆய்வாளரிடம், “வழக்குப் போட்டு வாழ்நாளெல்லாம் நீதிமன்றத்துக்கு அலைய விட்டு விடு வேன்” என்று ரகளை செய்துள்ளார்.

முருகானந்தம் கிளம்பிச் செல்ல அதிகாரிகள் அனுமதித்தபோதும், ஆத்திரத்துடன் அவர்களிடம் கைகாட்டி மிரட்டியவாறே முரு கானந்தம் புறப்பட்டு சென்றுள்ளார். இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வெளியான நிலை யில், பாஜக வேட்பாளரின் முகபாவ னையும், அவர் பேசிய விதமும் பலத்த எதிர்ப்புக்கு உள்ளாகி இருக்கிறது. நோட்டாவுடன் போட்டி போடும் நிலை யிலேயே இவ்வளவு ஆணவம் பிடித்த வராக இருந்தால், இவரெல்லாம் எம்.பி. ஆனால் என்ன ஆவது என கருத்துக் களைப் பதிவிட்டு வருகின்றனர்.