districts

திருப்பூர் உழைக்கும் மக்களை நகருக்கு வெளியே தள்ளும் வரி உயர்வுக்கு வலுக்கும் எதிர்ப்பு: சரிக்கட்ட மேல்பூச்சு வேலையா?

திருப்பூர் மாநகராட்சியில் வரி குறை  தீர்ப்பு முகாமினை மாநகராட்சி நிர்வா கம் கடந்த 5ஆம் தேதி வியாழக்கிழமை மைய அலுவலகத்தில் நடத்தியது. இதில் மேயர் தினேஷ்குமார், ஆணை யர் எஸ்.ராமமூர்த்தி ஆகியோர் பார்வை யிட்டதாகவும், மொத்தம் 59 மனுக்கள் பெறப்பட்டு, சரி பார்த்து மூன்று நாட்க ளில் தீர்வு செய்யப்படும் என்றும் செய்தி யறிக்கை வெளியிட்டுள்ளனர்.

திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில்  கடந்த ஏப்ரல் மாதம் முதல் சொத்து வரி  கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. மாநகரப் பகுதிகளை ஏ, பி, சி என தரம்  பிரித்து அதற்கேற்ப வரி நிர்ணயம் செய் யப்பட்டுள்ளது. இது தவிர, அரை யாண்டு சொத்து வரியை செலுத்தாவிட் டால் 1 சதவிகிதம் அபராதம், ஆண்டுக்கு  6 சதவிகிதம் சொத்து வரி உயர்வு என்றும்  அறிவிக்கப்பட்டுள்ளது. சொத்து வரி உயர்வுக்கு மாமன்றத் தில் ஆளும் திமுக தவிர, இரு கம்யூ னிஸ்ட் கட்சிகள், அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட பிரதான எதிர்க்கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்தன.

எனினும் இந்த  வரி உயர்வு என்பது அதிமுக காலத்தில் வரி சீரமைப்பு செய்யாததால் தற் போது உயர்த்தப்பட்டுள்ளது என்று விளக்கம் அளிக்கப்பட்டது. அத்துடன் மாநில அரசு மூலம் நேரடியாக முடிவு செய்யப்பட்டது. இதில் மாநகராட்சி நிர் வாகம் எதுவும் செய்ய முடியாது, எனி னும் மாமன்ற உறுப்பினர்களின் கருத்து களை மாநில அரசுக்கு எழுதி அனுப்ப லாம் என்றும் மேயர் தினேஷ்குமார் கூறி னார்.

சொத்து வரி உயர்த்தப்பட்டபோதே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாமன்ற  உறுப்பினர் எதிர்ப்புத் தெரிவித்துக் கடி தம் கொடுத்ததுடன், போராட்டமும் நடத் தப்பட்டது. எனினும் மாநகராட்சி நிர்வா கம் வரிக் குறைப்புக்கு நடவடிக்கை எடுக்காததால், கடந்த நவம்பர் 11ஆம்  தேதி மாநகரம் முழுவதும் அனைத்து வார்டுகளிலும் பொதுமக்களிடம் வரி  உயர்வை எதிர்த்து மனுக்களைப் பெற்று ஆயிரத்திற்கும் மேற்பட்ட வர்களைத் திரட்டி மாநகராட்சி முன்பாக  ஆர்ப்பாட்டம் நடத்தியது. அதற்கடுத்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் வரிக் குறைப்பை வலியுறுத்தி  ஆர்ப்பாட்டம் நடத்தியது.

அதிமுகவி னர் உண்ணாவிரதம் இருந்தனர். தேமு திகவினரும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.  அனைத்து பிரதான அரசியல் கட்சிக ளும் சொத்து வரி உயர்வைக் குறைக்க  வேண்டும் என வலியுறுத்தி போராட்டம்  நடத்திய நிலையில், அனைத்து வியாபா ரிகள் சங்கப் பேரவை சார்பிலும் சொத்து  வரியைக் குறைக்க வேண்டும் என்றும்,  இல்லாவிட்டால் போராட்டத்தில் ஈடுபடு வோம் என்றும் அறிவித்திருக்கின்றனர். பின்னலாடைத் தொழில் நகரமான திருப்பூரின் வளர்ச்சி தற்போது தொய்வ டைந்துள்ளது. விலைவாசி கடுமையாக  உயர்ந்திருக்கும் நிலையில் திருப்பூர்  மக்கள் வாழ்வு பெரும் நெருக்கடியைச்  சந்தித்து வருகிறது.

தொழில் சூழ்நிலை யிலும் நிச்சயமற்ற நிலையில் இருக்கும்  போது, சொத்து வரி உயர்வின் மீதான  மக்களின் கோபம் அதிகரித்து வருகி றது. இது மாநில அரசு முடிவு செய்த விச யம், சொத்து வரி உயர்வைக் குறைக்க  முடியாது, என்று மேயர் தினேஷ்குமார் திரும்ப திரும்பக்கூறி வந்தார். தற் போது எதிர்க்கட்சிகள் அரசியல் செய்வ தாகக் குற்றம் சாட்டுகிறார்.  மக்கள் பாதிக்கப்படும்போது எடுத்துக் கூறி நிவாரணம் கோருவது அரசியல் கட்சிக ளின் கடமை தானே? மேலும் மாநகராட்சி  நிர்வாகம் தீர்மானிக்க வேண்டிய சொத்து வரிப் பிரச்சனையில், மாநில அரசு, உள்ளாட்சி அதிகாரத்தைப் பறித்து ஆக்கிரமிப்புச் செய்துள்ளது. இதுவும் கண்டிக்கத்தக்கது. இதை விமர் சிப்பது அரசியல் கட்சிகளின் கடமை யும் ஆகும்.

உள்ளாட்சி அமைப்புகள் குடியி ருப்பு, குடிநீர், தெரு விளக்கு, கழிவுநீர்  வடிகால் உள்ளிட்ட மக்களின் அடிப்ப டைப் பிரச்சனைகளில் தீர்வு காண வேண்டும். சேவை நோக்கில் பணி யாற்ற வேண்டும். ஆனால் தாராளமயக்  கொள்கையை அமல்படுத்தும் ஒன்றிய  அரசும், மாநில அரசும் உள்ளாட்சிகளின்  அடிப்படை சேவைப் பணிகளை வணிக  நோக்கில் வியாபாரமாக மாற்றி மக்களி டம் பணம் பறிக்கும் விசயமாக மாற்றி விட்டனர்.

தற்போது வரி விதிப்புகள், சேவைக் கட்டணம் வசூலிப்பு என எல் லாமே அபரிமிதமாக மக்களிடம் பணம்  பறிப்பதாக மாறிவிட்டது. சாமானிய உழைப்பாளி மக்கள் நகரில் குடியி ருப்பது சவாலாக மாற்றப்பட்டு விட் ்டது.  திருப்பூர் வளர்ச்சியின் உச்சக்கட்ட  வேகத்தில் இருந்த 1990 கால கட்டத்தில்  இங்கு வேலை செய்த பனியன் தொழி லாளர் குடும்பங்கள் சிறுகச் சிறுக சேமித்த பணத்தைக் கொண்டு குடியி ருக்க ஒரு அளவான வீடு கட்டிக் கொள்ள  முடிந்தது. இப்படித்தான் நகரம் வேக மாக விரிவடைந்தது.

ஆனால் இன்று  அது முடியாததாக மாறிவிட்டது. கஷ்டப் பட்டு உழைத்து கட்டிய வீட்டுக்கு வரி செலுத்துவது என்பதே முடியாததாக மாறிக்கொண்டிருக்கிறது. மிகப்பெரும் பான்மையான உழைக்கும் மக்கள் நக ரின் சேரிப்பகுதிகளிலும், எல்லைக்கு வெளியே புறநகரப் பகுதிகளிலும் தான்  குடியிருக்க முடியும் என்ற நிலை ஏற் பட்டு விட்டது. அதனால்தான் மாநகராட்சி சொத்து வரி உயர்வு என்பது மக்களிடம் கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள் ளிட்ட கட்சிகள் சொத்து வரி உயர்வை  ரத்து செய்ய வேண்டும் என போராடி வருகின்றனர். இது ஏதோ ஒரு சிலரது  தனிப்பட்ட பிரச்சனைக்கான போராட் டம் இல்லை.

உழைப்பால் உயர்ந்த திருப்பூரில் உழைக்கும் மக்கள் சொந்த  வீடு கட்டி வாழ முடியாது என்ற நிலையை ஏற்படுத்தும் அரசின் கொள் கைக்கு எதிரான போராட்டமும் ஆகும். இதை புரிந்து கொண்டு ஆட்சியா ளர்கள் வரி உயர்வைக் கைவிடுவது தான் நியாயம். மாறாக சொத்து வரி  உயர்வைக் குறைக்க முடியாது என்று அரசு பிடிவாதம் காட்டுமானால் அதற் கான விளைவை அரசு சந்திக்க நேரி டும். இப்பிரச்சனையில் தற்போது மாநக ராட்சி நிர்வாகம் வரி குறைதீர்ப்பு முகாமை நடத்தியது கூட, அனைத்து  தரப்பினரின் கடும் எதிர்ப்பை சரிக்கட்டும்  வேலையாகத்தான் உள்ளது. இது போன்ற மேல்பூச்சு வேலைகள் திருப் பூர் மக்களை ஏமாற்ற முடியாது.

ஆளு வோர் காதுகளுக்கு போராட்ட மொழி தான் புரியும் என்பதால் ஒட்டுமொத்த திருப்பூர் மக்களின் எதிர்ப்பையும் திரட்டி வலுவான போராட்டம் கட்டமைக் கப்படும். மார்க்சிஸ்ட் கட்சியின் 24 ஆவது மாவட்ட மாநாடு இது குறித்து தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறது. மக் களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் விதத்தில் இந்தப் போராட்டம் நடக்கும்.  எனவே மேல்பூச்சு வேலைகளை விட்டு விட்டு உண்மையான நிவாரணம் காண  மாநகராட்சியும், மாநில அரசும் நடவ டிக்கை எடுக்க வேண்டும். இதுவே மக் களின் எதிர்பார்ப்பு. -வே.தூயவன்