திருப்பூர், ஜூலை 17- வண்ணாந்துறை புதூர் அருகே 10 ஆண்டுகளுக்கு மேலாக தெருவிளக்கு வசதிகள் செய்து கொடுக்கப்படாமல் உள்ளது. இதனால் அடிக்கடி திருட்டு சம் பவங்கள் நடைபெறுகிறது. எனவே உட னடியாக தெரு விளக்கு அமைத்து தர வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தில் பொதுமக்கள் புதனன்று மனு அளித்தனர்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தில் மனு அளிக்க வந்த பொது மக்கள் கூறியதாவது, நாச்சிபாளையம் கிராமம், ரங்கம்பாளையம் வண்ணாந் துறை புதூர் ஜிஎம் கார்டன் பகுதியில் 100 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் 10 ஆண்டு களுக்கு மேலாக தெரு விளக்கு, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை. இந்த வசதிகளை செய்து தரக் கோரி ஊராட்சி தலைவரிடம் மனு அளிக் கப்பட்டுள்ளது. மேலும், கிராம சபை கூட் டத்திலும் இரண்டு முறை மனு அளிக்கப் பட்டுள்ளது. இப்பகுதியில் உள்ள ஆண் கள் மற்றும் பெண்கள் திருப்பூருக்கு வேலைக்கு சென்று விட்டு வீடு திரும்ப இரவு 10 மணி ஆகிவிடும். தெரு விளக்கு இல்லாததால் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது. கடந்த வாரத்தில் இருவர் எங்கள் பகுதியில் உள்ள குழந் தையை கடத்த முயற்சி செய்துள்ளனர். மேலும், இரண்டு நாட்களுக்கு முன் னால் இதே குடியிருப்பு பகுதியில் உள்ள ஒரு வீட்டுக்குள் ஒருவர் திருட முயற்சி செய்தார். அவரை உடனடி யாக பிடித்து அவிநாசிபாளையம் காவல்துறையிடம் ஒப்படைத்துள் ளோம். இதுபோன்ற தொடர் சம்பவங் கள் எங்கள் பகுதியில் நடைபெறுவது கவலை அளிக்கிறது. எனவே இப்பகுதி யில் தெரு விளக்குகள் அமைக்க நடவ டிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது அதற்கு உரிய தீர்வு காண வேண்டும். காவல் துறை இரவு நேரங்களில் ரோந்து பணி யில் ஈடுபட நடவடிக்கை எடுக்க வேண் டும் எனக் கூறினர்.