districts

img

பல்லடம் அருகே ரூ.40 கோடி மதிப்பிலான கோயில் நிலம் மீட்பு

திருப்பூர், ஜன.10- பல்லடம் அருகே ரூ.40 கோடி மதிப்பிலான இந்து சமய  அறநிலையத்துறைக்குச் சொந்தமான கோயில் நிலம் மீட்கப்பட்டது. திருப்பூர் மாவட்டம், பல்லடத்தை அடுத்த நாரணாபுரம் அங்காளம்மன் திருக்கோவிலுக்கு சொந்தமான 8.95 ஏக்கர் புஞ்சை நிலம், பல்லடம் திருப்பூர் பிரதான சாலை யில் அமைந்துள்ளது. ரூ.40 கோடி மதிப்பிலான இந்த நிலத்தை பல்லடம் கரையான்புதூர் பகுதியை சேர்ந்த ராம லிங்கம், சேதுராமலிங்கம், செந்தில் அமுதா உள்ளிட்ட 6  நபர்கள் ஆக்கிரமிப்பு செய்து, 30 வருட காலமாக கோவி லுக்கு குத்தகை தொகை செலுத்தாமல் விவசாயம் செய்து  வந்துள்ளனர்.  இதனை அறிந்த இந்து அறநிலையதுறை இணை ஆணையர் ஜெயசந்திரன், இந்து அறநிலையத்துறை சார் பில் திருப்பூர் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்தார். இந்த  வழக்கை விசாரித்த நீதிமன்றம் மேற்படி நபர்களை ஆக்கி ரமிப்புதாரர்களாக கருதி நிலத்தை கையகப்படுத்தி நபர்களை வெளியேற்றம் செய்திட திருப்பூர் இணை ஆணை யருக்கு உத்தரவு வழங்கியது. இதனையடுத்து திங்களன்று பல்லடம் வட்டாட்சியர் தேவராஜ், திருப்பூர் இந்து சமய அற நிலையத் துறை உதவி ஆணையர் செல்வராஜ், நாராணா புரம் கிராம நிர்வாக அலுவலர் மோகன்தாஸ் மற்றும் காவல் துறையினரால் நிலம் மீட்கப்பட்டது. இந்த நிலம் நாரணா புரம் அங்காளம்மன் கோயிலுக்கு சொந்தமானது என அறி விப்பு பலகையும் வைக்கப்பட்டது.