தாராபுரம், ஏப்.3- தாராபுரத்தில் நடைபெற்ற சிறப்பு வாகன ஆய்வில் கலந்து கொண்ட போக்குவரத்து ஆணை யர், பாதுகாப்பு குறைபாடு களுடன் இயக்கப்படும் வாகனங் கள் மீது கடும் நடவடிக்கை எடுக் கப்படும் என எச்சரிக்கை விடுத் துள்ளார். தமிழகத்தில் சமீபகாலமாக பள்ளி வாகனங்கள் முறையாக பராமரிக்கப்படாமலும், அலட்சிய மாக வாகனத்தை இயக்குவதா லும் பள்ளி மாணவர்கள் உயிரி ழப்பு சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. தாராபுரத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனி யார் பள்ளி வாகனத்தின் சக்கரம் கழன்று சாலையில் ஓடியது, அதிர்ஷ்டவசமாக விபத்து நடை பெறாமல் தவிர்க்கப்பட்டது. மற் றொரு பள்ளியின் வாகனத்தில் இன்ஜினிலிருந்து ஆயில் ஒழுகிக் கொண்டே சென்றது. இது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆனது. இந்நிலையில், தமிழ்நாடு போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்புதுறை உத்தரவின் பேரில் தாராபுரத்தில் பள்ளி வாகனங்கள் சிறப்பு வாகன ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. தாராபுரம் ஐடிஐ வளாகத்தில் தமிழ்நாடு போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையர் நடராஜன் வாகனங் களை ஆய்வு செய்தார். ஆய்வின் போது, குறைபாடுகளுடன் இருந்த பள்ளி வாகனங்களை எச்சரித்ததுடன், இனிமேல் அந்த வாகனத்தை இயக்ககூடாது என உத்தரவிட்டார். பின்னர் செய்தி யாளர்களிடம் பேசுகையில், தமி ழகத்தில் முதன்முறையாக சிறப்பு பள்ளி வாகன ஆய்வு தாராபு ரத்தில் நடைபெற்றுள்ளது. தொடர்ந்து, தமிழகம் முழுவதும் இந்த சிறப்பு ஆய்வுகள் நடை பெறும். மேலும் அனைத்து பள்ளி வாகனங்களிலும் சிசிடிவி பொருத்த வேண்டும், ஓட்டுநர் மற்றும் வாகன பணியாளர்க ளுக்கு எமர்ஜென்சி கதவுகளை இயக்குவதற்கு பயிற்சியளிக்க வேண்டும். பிரேக், இன்ஜின், சக்கரம், படிக்கட்டு உள்பட பள்ளி வாகனங்களை தினந்தோறும் பரி சோதனை செய்த பின்னரே, வாகனங்களை இயக்க வேண் டும். ஓட்டுநர்களின் பார்வையை மறைக்கும்படி வைத்துள்ள பள்ளி யின் பெயர் அடங்கிய ஸ்டிக்கர் களை அகற்றவேண்டும். இதை போக்குவரத்து ஆய்வாளர்கள் கண்காணிக்க வேண்டும் என தெரிவித்தார். இந்த ஆய்வில், மாவட்ட வருவாய் ஆய்வாளர் ஜெயபீம் மற்றும் போக்குவரத்து துறை உயர்அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த சிறப்பு வாகன ஆய்வில் 27 பள்ளிகளை சேர்ந்த 124 வாகனங்கள் ஆய்வு செய்யப் பட்டது.