districts

img

ஊதியம் தாமதம்: தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்

அவிநாசி, ஜூன் 13- திருமுருகன்பூண்டி நகராட்சி யில் தூய்மைப் பணியாளர்களுக்கு ஊதியம் மாதம்தோறும் தாமதமாக வழங்கி வருவதை கண்டித்து, வியா ழனன்று ஊழியர்கள் போராட் டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மாவட்டம் திருமுரு கன்பூண்டி நகராட்சியில் 27 வார்டுகள் உள்ளன. இங்கு தூய்மைப் பணிகளை மேற்கொள்ள தனியார் ஒப்பந்தம் எடுத்துள்ளார். இவரிடம் சுமார் 60க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியாற்றி வரு கின்றனர். இந்த ஊழியர்களுக்கு மாதம் தோறும் 15 ஆம் தேதி கடந்தாலும் ஊதியம் வழங்கப் படாமல் இழுத்தடிக்கப்படுகிறது. இதனைக் கண்டித்து சிஐடியு தலைமையில், தூய்மைப் பணியா ளர்கள், வேலையை புறக்கணித்து நகராட்சி அலுவலகம் முன்பு போ ராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து சிபிஎம் நகர்மன்ற உறுப்பினர் சுப்பிரமணியம், ஒன் றியக்குழு உறுப்பினர் பாலசுப்பிர மணியம் மற்றும் நகர்மன்ற தலை வர் குமார், நகர்மன்ற உறுப்பினர் பாரதி, முன்னாள் பேரூராட்சி கவுன்சிலர் பொன்னுச்சாமி, உள் ளிட்டோர் நகராட்சி ஆணையரிடம் ஊதியம் உரிய தேதியில் வராதது குறித்து முறையிட்டனர்.

இதனைத்தொடர்ந்து, தூய்மைப் பணியாளர்கள், மாதம்தோறும் எங்கள் சம்பளத்தில் இஎஸ்ஐ, பிஎப், போன்றவை பிடித்துக் கொள்கிறார்கள், ஆனால் முறை யாக பிஎப் பணம் கட்டுவதில்லை இதனையும் தீர்க்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இக்கோரிக்கை குறித்து, வெள்ளி யன்று தனியார் ஒப்பந்ததாரருடன் பேசி தீர்க்கப்படும் என்றும், விரைந்து ஊதியத்தை வங்கி கணக் கில் வழங்குவதை உறுதி செய்கி றேன், என்றார். இதில் சிஐடியு சங்கம் சார்பில் வையாபுரி, சுமித்ரா, உட்பட பலர் கலந்து கொண்டனர். இதனைத்தொடர்ந்து தூய்மைப் பணியாளர்கள் பணிக்கு திரும்பி னார்.