திருப்பூர், ஜூன் 10- மாநில நெடுஞ்சாலை ஆணை யம் அமைப்பதன் மூலம் 3500 க்கும் மேற்பட்ட சாலைப்பணியாளர், சாலை ஆய்வாளர் பணியிடம் ஒழிக் கப்படும் அபாயம் உள்ளதாக கூறி சாலைப்பணியாளர்கள் சங்கத்தினர் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம் நடத்தினர்.
தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை சாலை பணியாளர் சங்க சார்பில் கோட்டப்பொறியாளர் அலுவலகம் முன்பு திங்களன்று கோட்டத் தலை வர் ஆர்.கருப்பன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில், மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைப்ப தன் மூலம் 3500 க்கும் மேற்பட்ட சாலைப்பணியாளர் சாலை ஆய்வா ளர் பணியிடம் ஒழிக்கப்படும் அபா யம் உள்ளது. நெடுஞ்சாலை ஆணை யம் அமைக்கும் முடிவை உடனடி யாக கைவிட வேண்டும். கிராமப்புற இளைஞர்களுக்கு நெடுஞ்சாலை பராமரிப்பு பணிகளில் வேலை வழங்க வேண்டும். நெடுஞ்சாலைத் துறையில் மீண்டும் சீரமைப்பு செய்து நிரந்தரப் பணியாளர்களை ஒழிப் பதை முற்றாக நிறுத்த வேண்டும். ஓய்வுபெற்ற ஊழியர்களை கொண்டு பணி மேற்கொள்வதை நிறுத்த வேண் டும். சாலைப்பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்த வேண்டும். சாலைப் பணியாளர்களுக்கு தொழில்நுட்பக் கல்வித் திறன் பெறாத ஊழியர் களுக்கு உரிய ஊதிய மாற்றம் ரூ.5600 – 20200, தர ஊதியம் ரூ.1900 வழங்க வேண்டும். சாலைப்பணியாளர்க ளின் ஒட்டுமொத்த முதுநிலை பட்டி யலை கடந்த 15 ஆண்டு காலமாக முறைகேடாக பதவி உயர்வு வழங் கும் நடைமுறைக்கு காரணமான முதன்மை இயக்குநர் மீது தக்க நட வடிக்கை எடுக்க வேண்டும் உள் ளிட்ட கோரிக்கைகளை வைத்து கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ் நாடு நெடுஞ்சாலை துறை சாலை பணியாளர் சங்க வட்டக்கிளை செய லாளர் கிருஷ்ணமூர்த்தி, வடக்கு வட் டக்கிளை துணைத்தலைவர் சாம் ராபர்ட், தமிழ்நாடு கிராம சுகாதார செவிலியர் சங்க மாவட்டத் தலைவர் பி.அன்னம் ஆகியோர் வாழ்த்தி பேசி னார். தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை சாலைப்பணியாளர் சங்க கோட்டச் செயலாளர் ஆர்.ராமன் கோரிக்கை கள் குறித்து விளக்கி பேசினார். தமிழ் நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் எ.ராணி சிறப்புரை ஆற்றி னார். தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர் சங்க மாநிலத் தலைவர் எம். பாலசுப்பிரமணியன் நிறைவுரையாற்றினார்.
இதில், கோட்ட துணைத்தலை வர்கள் சிவகுமாரன், கோட்டை இணைச்செயலாளர்கள் வி.எஸ்.செல்வராஜ், பி.விஸ்வநாதன் உட்பட பலர் பங்கேற்றனர்.