districts

img

குழப்பத்தைத் தவிர்க்க வீதிகளுக்குப் பெயர்ப் பலகை வைக்க கோரிக்கை

திருப்பூர், ஜூன் 13 -  திருப்பூர் அனுப்பர்பாளையம் பகுதியில் பெயரிடப்படாமல் உள்ள 9 வீதிகளுக்கு பெயர்ப் பலகை வைக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரியுள்ளது.

திருப்பூரில் வியாழனன்று மாந கராட்சி ஆணையர் பவன்குமார் கிரியப்பனவர், மாநகராட்சி மேயர் மற்றும் மாநகராட்சி உதவி ஆணை யர், மண்டலத் தலைவர் உள்ளிட் டோருக்கு மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப் பட்டது. இம்மனுவில் கூறியிருப்ப தாவது: திருப்பூர் மாநகராட்சியில், அனுப்பர்பாளையம் முதலாம் மண் டல அலுவலகத்திற்குத் தெற்குப் பகுதியில், காந்தி சாலையின் மேற்குப் பகுதியில் 9 வீதிகள் உள் ளன. இங்கு 100-க்கும் மேற்பட்ட வீடுகளும், பாத்திரப் பட்டறைகள், மருத்துவமனைகள், பனியன் கம்பெனிகள் உள்ளன.  வேலம்பா ளையம் பேரூராட்சியாக இருந்து திருப்பூர் நகராட்சியுடன் இணைக் கப்பட்டு, தற்போது மாநகராட்சி யாக விரிவடைந்த பிறகும், இப்பகுதி மக்கள் செலுத்தும் சொத்துவரி, குடிநீர்க் கட்டணம், வாக்காளர் அடையாள அட்டை, ரேசன் அட்டை, ஆதார் அட்டை, பான் அட்டை என அனைத்து ஆவணங்களிலும் அந்தப் பகுதிக்கு உரிய முகவரி காந்தி ரோடு என்றே பொதுவாக குறிப்பிடும் நிலை உள்ளது. 

ஆனால், இப்பகுதிக்கு எதிர்ப் புறம் கிழக்குப் பகுதியில் உள்ள அனைத்து வீதிகளுக்கும் பெயர் கள் உள்ளன. மேற்குப் பகுதியில் காந்தி சாலை என்று மட்டுமே உள்ள தால், பல நேரங்களில் அஞ்சல் ஊழியர்கள், அரசு அதிகாரிகள், மாநகராட்சிப் பணியாளர்கள் என அனைவருக்கும் குழப்பம் ஏற்படுகி றது.  இதன் காரணமாக, பல்வேறு சான்றிதழ்கள் பெறுவதில் தாம தங்களும், குழப்பங்களும் தொடர்ந்து ஏற்பட்டு வருகின்றன. எனவே, மாநகராட்சி முதலாம் மண் டல அலுவலகத்துக்கு தெற்குப் பகுதியில், கோவை டிபார்ட் மெண்டல் ஸ்டோர் வரை உள்ள 9 குறுக்கு வீதிகளுக்கும், காந்தி சாலை மேற்கு குறுக்கு வீதி 1, 2, 3 எனத் தொடங்கி 9 வரை வீதிப் பெயர்களோ அல்லது நமது மதிப்பு மிகுந்த விடுதலைப் போராட்டத் தலைவர்கள் பெயர்களையோ சூட்ட வேண்டும். அதன் அடிப்ப டையில் சம்பந்தப்பட்ட வீதிகளில் பெயர்ப் பலகைகள் அமைத்துத் தருவதற்கு மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொண்டனர்.

இந்நிகழ்வில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.ரங்க ராஜ், வேலம்பாளையம் நகரச் செய லாளர் ச.நந்தகோபால், நகரக் குழு உறுப்பினர்கள் அ.ஆறுமுகம், பி.சின்னச்சாமி, கிளைச் செய லாளர்கள் ஏ.முத்துக்குமார், சாந்தி, மாதர் சங்க நிர்வாகி கிருஷ்ண வேணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.