திருப்பூர், ஜூன் 10- திருப்பூர் அருகே தார்சாலை வசதி செய்து கொடுக்க வலியுறுத்தி பொதுமக்கள் திங்க ளன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வட்ட வலசு கிராமத்தில் 1500க்கு மேற்பட்ட பொது மக்கள் பல வருடங்களாக வசித்து வருகின்றனர். இந் நிலையில், இப்பகுதியில் தார் சாலை வசதி இல்லாததால் பள்ளிக்கு செல்லும் குழந்தை கள் முதல் வாகன ஓட்டிகள் என பலரும் பாதிக் கப்படுகின்றனர். மேலும், இதுவரை பல விபத் துக்கள் ஏற்பட்டுள்ளது. இது குறித்து வட்டார வளர்ச்சி அலுவலர், வட்டாட்சியர் முதல் மாவட்ட ஆட்சியர் வரை பலரிடம் மனு அளித்து எந்த நடவடிக்கையும் எடுத்துக்கப்ப டவில்லை. மாவட்ட நிர்வாகம் இனியும் காலம் கடத்தாமல் பொது மக்களின் நலனை கருத் தில் கொண்டு தார் சாலை அமைக்க நடவ டிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத் தில் மனு அளித்தனர்.