districts

img

ஆபாச - சனாதனப் பேர்வழியைக் கண்டித்து திருப்பூரில் முற்போக்கு இயக்கங்கள் போராட்டம்

திருப்பூர், செப். 10 - பள்ளிகளில் மூடநம்பிக்கை புரட்டு களைப் பிரச்சாரம் செய்ததுடன், மாற்றுத் திறனாளிகள், பெண்களை இழிவுபடுத்திய சனாதன- ஆபாசப் பேச்சு பேர்வழியான மஹாவிஷ்ணு மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி முற்போக்கு இயக்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

திருப்பூர் அவிநாசி சாலையில் அணைப்புதூர் அருகே குளத்துப் பாளையத்தில் செயல்பட்டு வரும் மஹாவிஷ்ணுவின் பரம்பொருள் அறக்கட்டளை அலுவலகத்தை திங்க ளன்று முற்றுகையிடப் போவதாக முற்போக்கு இயக்கங்கள் அறிவித் திருந்தன. இதையடுத்து காவல்துறை யினர் பேச்சுவார்த்தை நடத்தி, போராட்டத்தை செவ்வாயன்று நடத்திக்  கொள்ளும்படி கூறினர்.

இதனையடுத்து, செவ்வாயன்று திருப்பூர் அவிநாசி சாலை, அணைப் புதூர் பேருந்து நிறுத்தம் அருகில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில் மாணவர்களிடம், மாற்றுத் திறனாளி களையும், பெண்களையும் இழிவு படுத்தி ஆபாசமாக பேசி மூடநம்பிக்கை யைப் பரப்பி வரும் மஹாவிஷ்ணு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், யூடி யூப் சேனலில் பிற்போக்கு மூடக்கருத்து களை பேசி வருவதை தடை செய்யவும் அவரது சட்டவிரோத பணப் பரிவர்த்த னையை அரசு ஆய்வு செய்து நட வடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

போராட்டத்திற்கு, தமுஎகச மாநில செயற்குழு உறுப்பினர் ஆர்.  ஈஸ்வரன் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே. ரங்கராஜ், திராவிடர் விடுதலைக் கழகம் மாவட்டத் தலைவர் முகில் ராசு  த.பெ.தி.க. மாவட்டச் செயலாளர் சண்.  முத்துக்குமார், தி.க. தலைவர் யாழ்  ஆறுச்சாமி, சிபிஐ சார்பில் செல்வ ராஜ் எம்.சி., ஆதித்தமிழர் பேரவை மாவட்டச் செயலாளர் மணி, மதிமுக தலைமை நிலைய செயற்குழு உறுப்பி னர் சக்திவேல், புரட்சிகர இளைஞர் முன்னணி நிர்வாகி தமிழ் அமுதன், நவீன மனிதர்கள் அமைப்பின் தலை வர் பாரதி சுப்பராயன் உள்ளிட் டோர் உரையாற்றினர். பொது வுடமை, பெரியாரிய, அம்பேத்காரிய அமைப்புகளைச் சேர்ந்தோர் திரளானோர் கலந்து கொண்டனர்.