திருப்பூர், ஜூன் 11- ரிசர்வ் வங்கியின் எந்த நடைமுறை யையும் பின்பற்றாமல் கிராமப் புற பெண்களுக்கு கடன் வழங்குவதும், அதை திருப்பி செலுத்த முடியாத பெண் களிடம் தகாத முறையில் பேசும் நுண் நிதி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாதர் சங்கத்தினர் ஆட் சியர் அலுவலகத்தில் மனு அளித் துள்ளனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செவ்வாயன்று மாதர் சங்க மாவட்டச் செயலாளர் கே.சரஸ்வதி அளித்த மனு வில் கூறியிருப்பதாவது,
தமிழ்நாடு முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட நுண் நிதி நிறுவனங்கள், நகர்ப்புற கிராமப்புற பெண்களுக்கு கடன் தொகையை வழங்கி வருகின்றனர். இவ்வாறு கடன் வழங்கும் போது எவ்வித வரையறை யும் இன்றி அதிக வட்டியும், கடன் செலுத் தும் முறையின் விதிமுறைகள் குறித்தும் விளக்கம் அளிக்காமல் பெண்களுக்கு கடன் அளித்து வருகின்றனர். இதனால் கடனை திருப்ப செலுத்த முடியாத சூழ லில் உள்ள பெண்கள் மீது உளவியல் ரீதியான தாக்குதலை நடத்தி வருகின்ற னர். கு
றிப்பாக பட்டியலின பெண்களி டம் மிக மோசமான வார்த்தைகளை பேசு கின்றனர். மேலும், உடல் நலம் பாதிக்கப் பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பெண்களிடம் கூட மருத்து வமனைக்கு சென்று தவணைத் தொகையை கட்ட வற்புறுத்துகின்றனர்.
இதனால் மனமுடைந்த சில பெண்கள் தற்கொலை முயற்சி செய்கின்றனர். இவ்வாறு மாவட்டம் முழுவதும் நுண் நிதி நிறுவனங்களில் வாங்கிய கடனை திருப்ப செலுத்த முடியாமல் தற் கொலை செய்து கொள்ளும் பெண்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிக ரித்து வருகிறது. ஒரு உறுப்பினருக்கு 15 க்கும் மேற்பட்ட நுண்நிதி நிறுவ னங்கள் கடன் அளிப்பதும், கடனை திருப்பி செலுத்த மீண்டும் கடன் வழங்கு வது என்று பெண்களை மிகப்பெரிய கடன் வலையில் சிக்க வைக்கும் வேலைகளில் நுண்நிதி நிறுவனங்கள் இறங்கி உள்ளது.
ரிசர்வ் வங்கியின் எந்த நடைமுறைகளை பின்பற்றாமல் கடன் வழங்குவது, வசூலிக்க ரௌடி களை ஏவி விடுவது போன்ற செயல்க ளில் ஈடுபடும் நுண்நிதி நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்திட வேண்டும். நுண்நிதி நிறுவனங்களை முறைப்படுத்த மாநில, மாவட்ட, அள வில் அரசு குழுக்கள் அமைத்து கண்கா ணித்திட வேண்டும். நுண்நிதி நிறுவ னங்கள் மீதான புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும். தமி ழக அரசு பெண்களுக்கு கடனுதவி வழங்குவதற்கான தனி வங்கிகளை ஏற்படுத்தி வேண்டும் என கூறப்பட் டுள்ளது. இதில், மாவட்டத்தலைவர் எஸ்.பவித்திரதேவி, பொருளாளர் ஆர்.கவிதா, நிர்வாகிகள் பி.லட்சுமி, எஸ்.பானுமதி, ஆர்.கே.செல்வி கிளை நிர் வாகி கோகிலா ஆகியோர் கலந்து கொண்டனர்.