districts

குற்றவியல் சட்டங்களுக்கு பயன்பாட்டில் இல்லாத மொழியில் பெயர் வைத்திருப்பது கண்டனத்துக்குரியது

திருப்பூர், ஜூலை 4- குற்றவியல் சட்டங்களுக்கு பயன் பாட்டில் இல்லாத மொழியில் பெயர் வைத்திருப்பது கண்டனத்துக்குரியது என்று மூத்த வழக்கறிஞர் ப.பா.மோகன்   கூறினார். திருப்பூரில் புதனன்று பத்திரிகையா ளர்களை சந்தித்த ப.பா.மோகன் மேலும்  கூறியதாவது: ஒன்றிய அரசு 140 சட்டங் களை நீக்கிவிட்டு, மூன்று புதிய குற்ற வியல் சட்டத் திருத்தங்களை கொண்டு  வந்துள்ளது. பிரிட்டிஷ் அரசால் கொண்டு வரப்பட்ட சட்டங்களை 2024க்கு ஏற்ப திருத்தி சமஸ்கிருதத்தில் பெயர் மாற்றி கொண்டு வந்துள்ள னர். ஆங்கிலத்தில் இருந்த சட்டத்தின்  பெயர்களை அரசியல் சாசனம் வகுப்பு  348க்கு எதிராக சமஸ்கிருதத்தில் பெயர் மாற்றி உள்ளனர்.

உச்சநீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக ஆங்கிலமே உள்ள நிலையில், இதுபோல் மக் கள் பயன்பாட்டில் இல்லாத ஒரு மொழி யில் குற்றவியல் சட்டங்களுக்கு பெயர் வைத்திருப்பது கண்டனத்துக்குரியது. மேலும் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக  போராடிய சுதந்திர போராட்ட வீரர்களை  கைது செய்ய கொண்டு வரப்பட்ட தேச  விரோத சட்டப் பிரிவை விடவும் கொடூர மான உபா சட்டத்தை கொண்டு வந்துள் ளனர்.  

மேலும், புகார் அளித்தால் உடனடி யாக முதல் தகவல் அறிக்கை பதிவு  செய்ய வேண்டும் என்று இருந்ததை மாற்றி உடனடியாக பதிவு செய்யத் தேவையில்லை என மாற்றியுள்ளனர். இது குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு சாதகமாக அமையக்கூடும். 15 நாட்க ளாக இருந்த காவல்துறை விசாரணை நாட்கள். தற்போது 90 நாட்களாக மாற் றப்பட்டுள்ளது. விரைந்த நீதி, பாரபட் சம் இன்றி நீதி என்று கூறிவிட்டு கொடூ ரமான சட்டங்களைக் கொண்டு வந்துள் ளனர். காவல்துறைக்கு அதிகப்படி யான அதிகாரத்தை வழங்கி உள்ளார் கள்.

இந்த சட்டங்களை மாற்றி அமைக்க  கோரி நாடு முழுவதும் வழக்கறிஞர்கள் போராடி வருகிறார்கள். ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள இந்த மூன்று சட்டங்களும் ஜனநாய கத்திற்கு விரோதமானதாக உள்ளது என டெல்லி பார் கவுன்சில், பெங்கால்  பார் கவுன்சில் தீர்மானம் நிறைவேற்றி  உள்ளது. மேலும் தமிழ்நாடு அரசு,  மேற்குவங்க அரசுகள் இச்சட்டங்க ளுக்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற் றியுள்ளன என்று அவர் கூறினார்.