திருப்பூர், ஜூலை 17- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கத்தின் திருப்பூர் பிஎஸ்என்எல் கிளையின் சார்பில் பொன் விழா இலக்கிய அமர்வுக் கூட்டம் புதனன்று நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்குத் பழனிவேல்சாமி தலைமையேற்றார். பி.சௌந்தரபாண்டியன் மற்றும் எஸ்.சுப்பிரமணியம் முன் னிலை வகித்தனர். செயலாளர் குமரவேல் வரவேற்புரை நிகழ்த்தினார். மாவட்டக்குழு உறுப்பினர் காளிதாஸ் வாழ்த் துரை வழங்கினார். சௌந்தரபாண்டியன் தான் படித்த புத்த கங்களில் இருந்து சேகுவாரா, ஏகேஜி பற்றிய நினைவுகளைப் பகிர்ந்தார். திரைப்பட விமர்சனம் நிகழ்வில் ஏ.ஈஸ்வரன் மகா ராஜ் என்ற இந்தித் திரைப்படத்தைப் பற்றி எடுத்துரைத்தார். லலிதா, மாலதி பாரதியின் பாடல்களையும், அண்ணாதுரை திரைப்படப் பாடலை பாடி அசத்தினார்கள். கோவை சதாசி வம் சிறப்புரை நிகழ்த்தினார். ஆசிரியர் செல்வகுமார், குமர வேல் கவிதைகளை வாசித்தனர். முடிவில், அஞ்சல் ஊழியர் சங்கத்தின் ராஜேந்திரன் நன்றி கூறி கூட்டத்தை நிறைவு செய்தார்.