districts

img

ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

திருப்பூர், டிச.11-  திருப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் புதனன்று ஆய்வு மேற் கொண்டார்.

திருப்பூர்  ஊராட்சி ஒன்றியம், வள்ளிபுரம் ஊராட்சி, அவரப் பாளையத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி  திட்டத்தின் கீழ் ரூ.13.56 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும்  நியாயவிலைக்கடை மற்றும் ஈட்டிவீரம்பாளையம் ஊராட்சி,  மொய்யம்பாளையம் அங்கன்வாடி மையத்தில் ஆய்வு  மேற்கொண்டும், மொய்யம்பாளையத்தில் பொதுமக்க ளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்குவது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதைதொடரந்து, திருப்பூர் வடக்கு வட்டம், கணக்கம்பாளையம் பகுதியில் வாக்கா ளர் பட்டியலில் வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கல் தொடர் பாக மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் புதனன்று ஆய்வு  மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது, திருப்பூர் வருவாய் கோட்டாட்சி யர் மோகனசுந்தரம், வட்டாட்சியர்கள் (திருப்பூர் வடக்கு) மகேஷ்வரன், (அவிநாசி) திரு.சந்திரசேகர்,  திருப்பூர் வட்டார  வளர்ச்சி அலுவலர் வேலுச்சாமி, துறை சார்ந்த அலுவலர்கள்  பலர் கலந்து கொண்டார்கள்.