திருப்பூர், ஜூலை 25 - ஆமை வேகத்தில் நடைபெறும் வேலம்பாளையம் அரசு மருத்துவ மனையின் கட்டுமானப் பணியினை விரைவுபடுத்த வேண்டும் என மார்க் சிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது
திருப்பூர் மாவட்டம், வேலம்பா ளையம் அரசு மருத்துவமனை 86 படுக்கைகளுடன், இரண்டு அறுவை சிகிச்சை அரங்குகள், மகப்பேறு பிரிவு, ஆக்சிஜன் பிளான்ட் என 37 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப் பட்டு வருகிறது. இந்த மருத்துவ மனை கடந்த 5 ஆண்டுகளாக ஆமை வேகத்தில் நடந்து வருகிறது.
இந்நிலையில், கட்டுமானப் பணிகளைப் விரைவுபடுத்திட வலி யுறுத்தவும், தற்போதைய நிலை என்ன என்பது குறித்து ஆய்வு செய்திட மார்க்சிஸ்ட் கட்சி குழு அமைத்திருந்தது. இதில், மார்க் சிஸ்ட் கட்சியின் வேலம்பாளை யம் நகரச் செயலாளர் ச.நந்தகோ பால், 15. வேலம்பாளையம் கட்சிக் கிளைச் செயலாளர்கள் வெள்ளிங் கிரி, சரவணக்குமார், வசந்தி மற்றும் சிஐடியு தலைவர்கள் விஸ்வநா தன், பாண்டியராஜ் உள்ளிட்டோர் இக்குழுவில் பங்கேற்றிருந்தனர். இவர்கள் புதனன்று வேலாம்பா ளையம் அரசு மருத்துவமனை கட்டு மானப் பணிகளை நேரில் பார்வை யிட்டு, ஆய்வு செய்தனர். மேலும், அங்கிருந்த பொதுப் பணித்துறை உதவிப் பொறியாளர் கிருஷ்ண மூர்த்தியிடம், தற்போதைய கட்டு மானப் பணிகள் குறித்த நிலையை கேட்டறிந்தனர். அதில், அவர் இன் னும் ஒரு மாதத்திற்குள் கட்டுமானப் பணிகள் முழுமையாக நிறைவடை யும், என்றார்.
ஆனால், மருத்துவமனைக்குள் ஆய்வு செய்த அடிப்படையில், கட் டுமானப் பணிகள் முழுமையாக நிறைவடைவதற்கு இன்னும் ஓரிரு மாதங்கள் ஆகும் என்பது தெரிகி றது. மேலும், கட்டுமானப் பணிகள் முடிந்த பிறகே, மருத்துவத்துறை சார்ந்த பணிகளான படுக்கைகள், அறுவை சிகிச்சை அரங்கு, ஆய்வ கம், மருந்தகம் ஆகியவற்றில் அமைக்கப்பட வேண்டிய கருவி கள் நிறுவுதல், செயல்படுத்தல் மற் றும் வளாகத்திற்குள் அமைக்கப்பட் டுள்ள ஆக்சிஜன் பிளான்ட் உள் ளிட்ட பல பணிகளை முடிக்க வேண் டியுள்ளது. இதற்கு மேலும் சில மாதங்கள் ஆகுமென்பதை ஆய் வில் தெரியவந்துள்ளது.
வேலம்பாளையம் அரசு மருத் துவமனை கட்டுமானப் பணிகளை யும், உள்கட்டமைப்பு வசதிகளை யும் விரைந்து முடிப்பதோடு, மருத் துவர்கள், செவிலியர்கள், துறை சார்ந்த பணியாளர்களையும் முழு மையாக பணியமர்த்த அரசு கூடு தல் கவனம் செலுத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேலம்பாளையம் கிளைகள் சார் பில் வலியுறுத்தினர். மேலும், இது தொடர்பாக அதிகாரிகளை சந்தித்து முறையிடுவது என மார்க்சிஸ்ட் கட்சி முடிவெடுத்துள்ளது.