districts

img

உடுமலை அருகே காயத்துடன் இருந்த கழுகு: விவசாயி மீட்டு வனத்துறையிடம் ஒப்படைப்பு

உடுமலை அருகே காயத்துடன் இருந்த கழுகை மீட்டு விவசாயி  வனத்துறையிடம் ஒப்படைத்தார்.

திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே கண்ணமநாயக்கனூர் ஊராட்சியில் விவசாயி செல்வராஜ் என்பவரின் மல்பெரி தோட்டம் பகுதியில் இன்று காலை அரிய வகை கழுகு குஞ்சு ஒன்று காயத்துடன் பறக்க முடியாமல் மிகவும் திணறிக் கொண்டிருந்த நிலையில், விவசாயி செல்வராஜ் உடுமலையில் உள்ள 24 மணி நேரம் செயல்படும் கால்நடை மருத்துவமனைக்கு கழுகு குஞ்சை கொண்டு வந்தார். அங்கு கால்நடை மருத்துவர் சுகன்யா கழுகு குஞ்சுக்கு சிகிச்சை அளித்தார்.

பின்னர் வனத்துறையிடம் தகவல் தெரிவித்த பின்னர் உடுமலை வனச்சரகர்  மணிகண்டன் அறிவுறுத்தல் படி வனத்துறை ஊழியர் மலர் என்பவரிடம் கழுகு குஞ்சு ஒப்படைக்கப்பட்டது.

வனத்துறையினர் கூறும் பொழுது, காயத்துடன் அவதிப்பட்ட  கழுகு குஞ்சு கழுகு எனவும், தற்பொழுது கால்நடை மருத்துவர் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. வனத்துறை அலுவலகத்தில் ஒரு மணி நேரம் கண்காணிப்பில் பாதுகாக்கப்பட்டு பின்னர் முழுவதும் சரியானதும் அடர்ந்த வனப்பகுதியில் விடப்படும் என தெரிவித்தார்.