districts

img

அரசு பள்ளி மாணவன் வெளிநாட்டு பயணம் செல்லத் தேர்வு

திருப்பூர், ஜூலை 15- பெருமாநல்லூர் ஊராட்சி ஒன்றிய பள்ளி  மாணவர் மாநில அளவில் நடைபெற்ற வினாடி வினா  போட்டியில் வெற்றி பெற்று  வெளிநாட்டு பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பை வென்றுள் ளார்.

பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாநில அளவில் நடை பெற்ற இலக்கிய மன்றம் மற்றும் வினாடி வினா போட்டியில் பெருமாநல்லூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாண வன் தரணி வெற்றி பெற்று வெளிநாட்டு பயணம் மேற்கொள் ளும் வாய்ப்பினை வென்றுள்ளார். அதேபோல் இப்பள்ளியை  சேர்ந்த மாணவி தீக்ஷிதா மாவட்ட அளவில் நடைபெற்ற  போட்டியில் வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளி தலைமை ஆசிரியர்,  ஆசிரியர்கள் பெற்றோர் ஆசிரியர் கழகம், பள்ளி மேலாண்மைக்குழு, முன்னாள் மாணவர் சங்கம் உள்ளிட் டோர் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.