districts

அமராவதி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

அமராவதி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

திருப்பூர், நவ.27- அமராவதி அணையின்  நீர்ப்பிடிப்புப் பகுதியில் கன மழை பெய்து அணை விரை வாக நிரம்பிவருவதால், அம ராவதி ஆற்றில் உபரிநீர் திறப் பது அதிகரிக்கும். எனவே  அமராவதி ஆற்றுக் கரை யோர மக்களுக்கு வெள்ள  அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை வட்டம் அமரா வதி அணையில் நீர் நிரம்பி உள்ளது. மொத்தக் கொள்ளவான  90 அடியில் 88 அடி உயரத்துக்கு நீர் உள்ளது. இந்நிலை யில், அமராவதி அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் தொடர்  மழை பெய்து வருவதால் அமராவதி அணைக்கு நீர் வரத்து  அதிகரித்துள்ளது. எனவே மேலும்,  நீர்மட்டம்  அதிகரிக்கும்  நிலையில், உபரி நீர் திறப்பது அதிகரிக்கப்படும். எனவே ஆற்றின் கரையோரப் பகுதி மக்கள் ஆற்றில் குளிப்பது, துணி  துவைப்பது, கால்நடைகளை மேய்ப்பது  போன்ற செயல்பாடு களைத் தவிர்க்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் தா. கிறிஸ்துராஜ் எச்சரித்துள்ளார்.