திருப்பூர், டிச.5 - திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் சுற்று வட்டாரப் பகுதிகளில் 40 நாட்களுக்கு முன் நடவு செய்யப்பட்ட நெற்பயிர்கள் அழுகி, விவசாயிகளுக்குப் பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த வாரம் வெள்ளியன்று நடைபெற்ற திருப்பூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்வு கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.ஆர்.மதுசூதனன் பேசுகையில், மடத்துக்குளம், தாராபுரம் பகு தியில் 3000திற்கும் மேற்பட்ட ஏக்கர் விளை நிலங்களில் பயிரிடப்பட்ட நெல் பயிர்கள் ஒரே மாதத்தில் அழுகிவிடுகிறது. இது நோய் தாக்குதலா? அல்லது பூச்சிமருந்து அடித்த தன் பாதிப்பா? என தெரியவில்லை. இதனால் விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு 30 ஆயிரம் ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. வேளாண்மை துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு விவசாயிகளுக்கு உரிய இழப் பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
இதையடுத்து மறுநாள் வேளாண்மை துறை அதிகாரிகள், மாவட்ட ஆட்சியரின் நேர் முக உதவியாளர், ஆய்வாளர்கள் உள்ளிட் டோர் மடத்துக்குளம் பகுதிக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வில் ஒரு விவசாயியின் நிலத்தில் மட்டும் களைக் கொல்லி பாதித்துள்ளது என தெரிவித்து விட்டு, மீதி நிலங்கள் குறித்து எந்த பதிலும் சொல்லாமல் சென்றுவிட்டனர்.
இந்நிலையில் கடந்த புதனன்று வேளாண்மை துறை சார்பில் மடத்துக்குளம் தாலுகா ஜோதம்பட்டியில் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டுள்ளது. இதில் கலந்து கொண்ட விவசாயிகள் பாதிக் கப்பட்ட நிலங்கள் குறித்து கேள்வி கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த எம்.எம்.வீரப்பன் கூறுகையில், மடத் துக்குளம் முதல் தாராபுரம் வரை அமராவதி பிரதான கால்வாய் புதிய ஆயக்காட்டு பகுதி முழுவதும் 5000 ஏக்கர் நிலங்களில் நடவு செய்யப்பட்டுள்ள நெற்பயிர்கள் பாதிக்கப் பட்டுள்ளன. குறிப்பாக கடந்த 40 நாட்களுக்கு முன் நடவு செய்யப்பட்ட அனைத்து விளைநி லங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள் ளன. இதில் 300 ஏக்கரில் நெற்பயிர்கள் 75 சத வீதம் பாதித்துள்ளது. ஆனால் புதனன்று நடந்த விழிப்புணர்வு முகாமில் இதுகுறித்து வேளாண் துறையினர் எந்த பதிலும் சொல்ல வில்லை. நிவாரணம் குறித்தும் பேசவில்லை. இனி வரும் காலங்களில் பயிர்களை எப்படிக் காப்பது என்று பாடம் எடுக்கின்றனர்.
விவசாயிகள் ஒரு ஏக்கருக்கு 30 ஆயிரம் வரை செலவு செய்து விதைத்த நெற்பயிர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. குறைந்தபட்சம் 50 சத வீதம் பாதிக்கப்பட்ட விளைநிலத்திற்காவது இழப்பீடு வழங்க வேண்டும் என வேளாண்மை துறை மற்றும் மாவட்ட நிர்வா கத்திடம் கோரிக்கை வைத்தோம். அதற்கு முறையாக பதில் சொல்லாமல், மாவட்ட ஆட்சியரிடம் ஆலோசித்து பதில் சொல்வதா கக் கூறிவிட்டுச் சென்றுவிட்டனர். இப்போ தைய இழப்புக்கு பதில் சொல்லாமல், அடுத்து எப்படி விவசாயம் செய்வதென்று வகுப்பு எடுக்கின்றனர் என்று கோபாவேசத்து டன் விவசாயிகள் கூறினர். எனவே வெள்ளி யன்று மடத்துக்குளம் வேளாண்மைத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட் டம் நடத்த இருப்பதாகத் தெரிவித்தனர்.