திருப்பூர், ஜூலை 18- வாவிபாளையம் தமிழ்நாடு நகர்ப் புற மேம்பாட்டு வாரிய குடியிருப்பு அருகே அதானி கேஸ் டெஸ்டிங் பாயிண்டில் வெடி விபத்து ஏற்பட்டதில் குடியிருப்பு வாசி பெண் ஒருவருக்கு காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திருப்பூர் மாநகராட்சி வாவிபாளை யம் அருகே தமிழ்நாடு நகர்ப்புற மேம் பாட்டு வாரிய குடியிருப்பு அமைந்துள் ளது. குடியிருப்பின் அருகில் அதானி கேஸ் பைப்லைன் டெஸ்டிங் பாயிண்ட் அமைந்திருக்கிறது. இந்நிலையில் புத னன்று அதானி கேஸ் லைனில் வெடி விபத்து ஏற்பட்டது. அதில் இருந்த பாகங் கள் பறந்து வந்து குடியிருப்பு பகுதி யில் வசித்து வரும் சுந்தராம்பாள் என்ப வரின் மேல் விழுந்து, கால் முறிவு ஏற் பட்டுள்ளது. தற்போது சுந்தராம்பாள் கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறு கையில், குடியிருப்பு பகுதியில் போதிய பாதுகாப்பற்ற முறையில் அமைக்கப் பட்ட இந்த கேஸ் பைப்லைனால் ஒருவ ருக்கு அடிபட்டுள்ளது. நல்வாய்ப்பாக உயிருக்கு எந்த ஆபத்தும் ஏற்பட வில்லை. காயங்களுடன் தப்பிவிட் டார். உயிருக்கு ஏதேனும் ஆபத்து ஏற் பட்டிருந்தால் யார் பொறுப்பு. அதானி யிடம் கேட்க முடியுமா? இதுபோன்ற கேஸ் லைனை, அதானி கேஸ் போன்ற தனியார் நிறுவனங்கள் குடியிருப்புக ளுக்கு அருகே கொண்டு செல்லும் போது பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட் டுள்ளதா என்பதை அரசு கவனிக்க வேண்டாமா? சிறிய விபத்து என்பதால் ஒருவருடன் முடிந்துவிட்டது. எனவே இனிமேல் இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க அரசு அதானி கேஸ் போன்ற தனியார் நிறுவனங்களை கண்காணிக்க வேண்டும். மேலும், குடியிருப்புகளுக்கு மத்தியில் அமைக் கப்படும் டெஸ்டிங் பாயிண்ட்யை சுற்றி பாதுகாப்பு அம்சங்கள் ஏற்படுத்தி இருப் பதை உறுதி செய்ய வேண்டும் என கூறி னர்.