திருப்பூர், ஜூலை 19 – திருப்பூர் சிவில் இன்ஜினியர்ஸ் அசோசி யேசன் சார்பில் 200 அரங்குகளுடன் கட்டட கட் டுமானப் பொருட்கள் கண்காட்சியை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் திறந்து வைத்தார்.
19 ஆவது கட்டட கட்டுமானப் பொருட்கள் கண்காட்சி கன்ஸ்ட்ரோ மெகா 2024-ஐ தாராபுரம் ரோட்டில் உள்ள வித்யா கார்த்திக் திருமண மண்டபத்தில் வெள்ளியன்று அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். தொடக்க நிகழ்ச்சியில் செயலாளர் ஜார்ஜ் லியோ ஆனந்த் வர வேற்றார். தலைவர் அருண் கே.ரமேஷ் தலைமை ஏற்றுப் பேசினார். கண்காட்சி தலை வர் ஜனார்த்தனன் விழா அறிக்கை வாசித் தார். பொறியியல் பொக்கிசம் 2024 விழா மலரை செல்வராஜ் எம்.எல்.ஏ. வெளியிட மேயர் தினேஷ்குமார் பெற்றுக் கொண்டார்.
துணை மேயர் பாலசுப்பிரமணியம், மாநில துணைத்தலைவர் பிரபு, கண்காட்சி செயலாளர் கௌதம் ஆகியோர் வாழ்த்தி பேசினர். மாநில முன்னாள் தலைவர் தில்லை ராஜன், மண்டலத் தலைவர் ஸ்டாலின் பாரதி, பட்டயக் கணக்காளர் செந்தில்குமார் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இந்த கண்காட்சி வரும்22ஆம் தேதி வரை காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை நடக் கிறது. கட்டடங்களுக்கு தேவையான செலவு குறைவாக ஆகக்கூடிய புதிய வகையான பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன. பசுமை கட்டுமானம் சார்ந்த செங்கல், கம்பி, சிமெண்ட், ரெடிமேட் கான்கிரீட் நிறுவனங் கள், மரம் மற்றும் மரம் சார்ந்த பொருட்கள், டைல்ஸ், கிரானைட், மார்பிள்ஸ், வுட்டன் ப்ளோரிங், மாடர்ன் எலக்ட்ரிகல், மற்றும் மாடர்ன் பிளம்பிங் மெட்டீரியல்ஸ், புதிய வகையான மின் விளக்குகள், அலங்கார விளக்குகள், சிசிடிவி கேமரா, மாடர்ன் ஹோம் ஆட்டோமேஷன், ஸ்டெ யின்லெஸ் ஸ்டீல் வகைகள், பேவர் பிளாக், சோலார், லாக்கர், பலவிதமான கண்ணாடி வகைகள் மற்றும் புதிய பெயிண்ட் வகைகள், நியூ பாத் பிட்டிங்ஸ், இது போன்று இன்னும் பல புதுமைகள் கண்காட்சியில் இடம் பெற் றுள்ளன.