districts

img

ஒன்றிய அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

திருப்பூர், மே 28- மோடி தலைமையிலான ஒன்றிய அரசின் மக்கள் விரோத  கொள்கைகளைக் கண்டித்து திருப்பூர் வடக்கு நகரில்  ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. திருப்பூர் வடக்கு மாநகரில் குமரானந்தபுரம், வ.உ.சி. நகர், கொங்கு மெயின் ரோடு, ரங்கநாதபுரம் கொடிமரம், சர ளைக்காடு, கருமாரம்பாளையம், நெசவாளர் காலனி, கொங்கணகிரி, குலாம் காதர் லே அவுட் உள்ளிட்ட பகுதி களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூ னிஸ்ட் கட்சி மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் சார்பில், மோடி தலைமையிலான ஒன்றிய அரசின் மக்கள் விரோத கொள்கைகளைக் கண்டித்து ஆர்ப்பாட்டங்கள் நடை பெற்றன. இந்த ஆர்ப்பாட்டங்களில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் ஆர்.மைதிலி, மாநகர செயலா ளர் பி.ஆர்.கணேசன், வடக்கு மாநகரக்குழு உறுப்பினர் எஸ். ராஜேந்திரன், சண்முகசுந்தரம், சிபிஐ கவுன்சிலர் ராஜேந்தி ரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

;