திருப்பூர், நவ.27 - பார் கவுன்சிலில் பெண்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் வழங்க வேண் டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை நிறைவேற்ற வலியுறுத்தி அகில இந்திய வழக்கறிஞர் சங்கத்தின் சார்பில் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட் டது.
திருப்பூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், அகில இந்திய வழக்கறிஞர் சங்கத்தின் சார்பில் புதன்கி ழமை இந்த கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. இதில் வழக்கறிஞர் எஸ்.ஏ.தமயந்தி, ஏ.அமர்நாத், ஏ.மண வாளன் மற்றும் எஸ்.பொன்ராம் உள் ளிட்டோர் பங்கேற்றனர். அனைத்து நீதிமன்றங்களிலும் பெண் வழக்கறிஞர்களுக்கு கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறை வேற்றித் தர வேண்டும், நீதிமன்ற வளா கத்தில் குழந்தைகள் காப்பகம் அமைக்க வேண்டும்,
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் மற்றும் அங்கீ கரிக்கப்பட்ட வழக்கறிஞர் சங்கங்களில் பெண்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும், பாலியல் சீண்டல்க ளில் இருந்து பாதுகாக்க அனைத்து நீதித்துறை அலுவலகங்களில் விசாகா புகார் கமிட்டி அமைக்க வேண்டும்.
இரு பால் இளம் வழக்கறிஞர்களுக்கும் மாத உதவித்தொகை வழங்க வேண்டும் உள் ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய வழக்கறிஞர் சங்கத்தின் சார்பில் தமிழகம் முழுவதும் கையெ ழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. அதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளா கத்தில் அகில இந்திய வழக்கறிஞர் சங் கத்தினர் இந்த கையெழுத்து இயக் கத்தை நடத்தினர்.