districts

கூட்ட அரங்க பிரச்சனை: போராடிய விவசாயிகள் கூட்டத்தை நடத்தாமல் வெளியேறிய ஆட்சியர்

திருப்பூர், மே 28 – திருப்பூர் மாவட்ட மாதாந்திர விவசாயிகள் குறை தீர்ப்புக் கூட் டத்தை ஏற்கெனவே நடத்திய கூட்ட அரங்கில் நடத்த வலியு றுத்தி விவசாயிகள் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட னர். இந்நிலையில் கூட்டத்துக்கு வந்த மாவட்ட ஆட்சியர் கோபத் துடன் கூட்டத்தை நடத்தாமல் வெளியேறிச் சென்றார். அதிகாரிகளையும் வெளியேறிச் செல்ல உத்தரவிட்டார். இச்சம்ப வம் விவசாயிகளிடம் அதிருப் தியை ஏற்படுத்தியது. திருப்பூரில் மாவட்ட ஆட்சி யர் எஸ்.வினீத் பொறுப்புக்கு வந்த நிலையில் ஆரம்பத்தில் கொரோனா பொது முடக்கம் காரணமாக விவசாயிகள் குறை தீர்க் கூட்டம் நடத்தப்படாமல் இருந் தது. பின்னர் மாதாந்திர குறை தீர்க்கூட்டத்தை நடத்தியபோது, வழக்கமாக ஆட்சியரகத்தின் இரண்டாவது தளத்தில் நடத்தா மல், தரை தளத்தில் அறை எண் 20 இல் ஏற்பாடு செய்து நடத்தினார். இதையடுத்து விவசாயிகள் ஆட்சே பம் தெரிவித்தனர். இரண்டாவது தளத்தில் இருக்கும் கூட்ட அரங் கில் விவசாயிகள் அமர்ந்து பேசு வதற்கு வசதியாக இருக்கையு டன், மேஜையும், மைக் வசதியும் உள்ளது. மேஜையில் குறிப் பெடுக்கவும், மனு எழுதவும் வசதி யாக இருந்தது. ஆனால் அறை எண் 20இல் மேஜை வசதி இல்லாமல் நாற்கா லிகள் மட்டுமே நெருக்கமாக போடப்பட்டு உள்ளன. இதனால் அங்கு மனு எழுதவோ, குறிப்பெ டுக்கவோ சிரமமாக இருப்பது டன், விவசாயிகள் பேசுவதற்கு மைக் வசதியும் இல்லை. எனவே வழக்கமான இரண் டாவது தளத்தில் கூட்டத்தை நடத் துமாறு விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

இதற்காக போராட்டத்திலும் ஈடுபட்டனர். ஆனாலும் மாவட்ட ஆட்சியர் எவ் வித காரணமும் சொல்லாமல் தொடர்ந்து தரைதளம் அறை எண் 20-லேயே கூட்டத்தை நடத்து கிறார். கடந்த மாதம் நடைபெற்ற விவசாயிகள் குறை தீர்க்கூட்டத் திலும் இப்பிரச்சனையை எழுப்பி யபோதும் ஆட்சியர் பதில் அளிக் காமல் தவிர்த்தார். இந்நிலையில் மே 28ஆம் தேதி சனிக்கிழமை இந்த மாதத்திற்கான விவசாயி கள் குறைதீர்க் கூட்டம் அறை எண் 20லேயே ஏற்பாடு செய்யப்பட்டி ருந்தது. இந்த கூட்டத்துக்கு வந்த விவசாயிகள் தரையில் அமர்ந்து தங்கள் கோரிக்கையை வலியு றுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட னர். அப்போது கூட்டத்துக்கு வந்த மாவட்ட ஆட்சியர் விவசாயி களை இருக்கையில் அமரும்படி கூறினார். ஆனால் கோரிக் கையை வலியுறுத்தி விவசாயி கள் போராட்டத்தைத் தொடர்ந்த னர். இதனால் கோபமடைந்த மாவட்ட ஆட்சியர் அங்கிருந்த அரசு அதிகாரிகளையும் வெளி யேறும்படி கூறிவிட்டு அவரும் கூட்டத்தை நடத்தாமல் வெளியே புறப்பட்டுச் சென்றார். தொடர்ந்து விவசாயிகள் போராடி வந்த நிலையில், ஆட்சி யர் அலுவலக கூட்ட அரங்கில் வந்து விவசாயிகளிடம் கோரிக்கை மனுக்களைப் பெற் றார். ஒரு பகுதி விவசாயிகள் மட் டும் கோரிக்கை மனு அளித்தனர். எனினும் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கூறும்போது, விவசாயிகளுக்கு உரிய கண்ணி யத்துடன் கூட்டத்தை நடத்தாதது டன், ஏற்கெனவே கூட்டங்களில் முன்வைத்த கோரிக்கைகளுக் கும் ஆட்சியர் எவ்வித தீர்வும் காணவில்லை. ஆனால் உரிய விளக்கம், பதில் அளிக்காமல் பிடிவாதமாக செயல்படுவது உயர்ந்த பொறுப்பில் இருக்கும் ஆட்சியருக்கு அழகில்லை என் றும் விவசாயிகள் காட்டமாக விமர்சித்தனர்.