districts

img

வயநாட்டிற்கு சிபிஎம் - சிஐடியு நிவாரண உதவி

திருப்பூர், ஆக.21- கேரள மாநிலம் வயநாட்டு பேரிடரில் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு நிவாரண பொருட்கள் மற்றும் நிதி உதவி வழங்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலக்குழு அறைகூவல் விடுத்திருந்தது. 

அதன் அடிப்படையில் வயநாடு பேரிட ரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில், சிஐடியு கோவை மாவட்டக்குழு சார்பில் இணைக்கப்பட்ட சங்கங்களிடம் இருந்து வசூலிக்கப்பட்ட 3 லட்சம் ரூபாயை கேரள மாநில முதல்வர் பினராய் விஜயனி டம், சிஐடியு நிர்வாகிகள் வழங்கினர். இதில், சிஐடியு கோவை மாவட்ட தலைவர் கே.மனோகரன், செயலாளர் எஸ்.கிருஷ்ண மூர்த்தி, பொருளாளர் ஆர்.வேலுசாமி மற்றும் நிர்வாகிகள் கே.சந்தோஷ், சி.துரைசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதேபோல, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் திருப்பூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டக் குழுக்கள் சார்பில் சேகரிக்கப்பட்ட சுமார்  3 லட்சம் ரூபாய் மதிப்புள்ள உணவு தானி யங்கள், சமையல் பொருட்கள், போர்வை கள், ஆடைகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ், திருப்பூர் மாவட்டச் செய லாளர் செ.முத்துக்கண்ணன், நீலகிரி மாவட்டச் செயலாளர் வி.எ.பாஸ்கரன் ஆகி யோர் வயநாடு மாவட்டச்செய லாளர் கெஹாரியிடம் செவ்வாயன்று வழங்கினர்.

இந்நிகழ்வில், சிஐடியு மாநிலச் செயலா ளர் கே.ரங்கராஜ், கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.உன்னிகிருஷ் ணன், இடுவாய் ஊராட்சி மன்ற தலைவர் கணேசன், விவசாய சங்க நீலகிரி மாவட்டச் செயலாளர் யோகனன் ஆகியோர் உடன் இருந்தனர்.