districts

img

அருந்ததியர் மயானத்திற்கு காங்கிரீட் பாதை: அவிநாசி ஒன்றியக் கூட்டத்தில் வலியுறுத்தல்

அவிநாசி, ஜூலை.16 – அவிநாசி ஊராட்சி ஒன்றியத் துக்கு உட்பட்ட நல்லகட்டிபாளை யம், குப்பாண்டம்பாளையம் அருந் ததியர் சமுதாயத்தினர் பயன்ப டுத்தி வரும் மயானத்திற்கு காங்கி ரீட் சாலை அமைத்துத்தர வலியு றுத்தப்பட்டது.

மேலும் வஞ்சிபாளையம் அருகே சென்னிமலை கவுண்டர் நகர் பகுதி மக்களுக்கு பொருத்த மான வழித்தடம் அமைக்க வேண் டும் என்று மார்க்சிஸ்ட் கட்சி ஒன் றியக் கவுன்சிலர் பி.முத்துசாமி கோரினார்.

அவிநாசி ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம், ஊராட்சி ஒன்றிய தலைவர் ஜெகதீசன் தலை மையிலும் வட்டார வளர்ச்சி அலுவ லர் ரமேஷ் குமார், விஜய் குமார் முன்னிலையில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் ஒன்றிய கவுன்சிலர் பி. முத்துசாமி பேசுகையில், பொன்  ராமபுரத்தில் சமுதாய நலக்கூ டத்திற்கு எந்தவித அடிப்படை வசதி களும் இல்லை. ஆனால் அங்கு  காவலருக்கு ரூ.9,300 கொடுப் பதாக ஊராட்சி நிர்வாகம் பணம் எடுத்துள்ளது. அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் மனு அளித்துள் ளனர். இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும், 

ஒன்றியக் குழு கூட்டத்தில் முன் வைக்கப்பட்ட தீர்மானத்தில் மின்  கட்டணம் அதிகமாக தெரிய வருகி றது, மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த கோரியும், சிக்கன மாக பயன்படுத்தும் வகையில் சோலார் போன்றவை பயன்படுத்து மாறும் அறிவுறுத்தினார். சென்னிம லைகவுண்டர் நகர் பகுதி மக்க ளுக்கு ஏதுவாக பொருத்தமான சாலை ஏற்படுத்தி தர வேண்டும். அய்யம்பாளையம் ஊராட்சியில் சின்னரங்கன் என்ற டேங்க் ஆப ரேட்டர் பணியின்போது மரணம் அடைந்து விட்டார். இவரது குடும் பத்தாருக்கு எவ்வித அரசு சலுகைக ளும் தற்போது வரை கிடைக்க வில்லை. உடனடியாக வழங்க வேண்டும் என்றார்.

சேதுமாதவன் பேசுவையில், தேவம்பாளையம் பகுதியில் மயா னத்திற்கு சுற்றுச்சுவர், குளத்துப்பா ளையம் பகுதியில் அங்கன்வாடி மையம் புதிதாக அமைத்திடவும், பெரியாயிபாளையம் பகுதியில் மக் களுடன் முதல்வர் காலை உணவு திட்டத்திற்கு சமையல் கூடம் அறை ஏற்படுத்தி தரவும், பழங்கரை ஊராட்சி தேவம்பாளையம் பகுதியில் புதிதாக கால்நடை மருத்துவமனை அமைத்துத் தர வும் கேட்டுக் கொண்டார்.

கார்த்திகேயன் பேசுகையில், பழங்கரை ஊராட்சியை மாநகராட் சியுடன் இணைக்காமல், பேரூராட் சியாக தரம் உயர்த்த வேண்டும், ரங்கா நகர் பகுதியில் வேகத்தடை  அமைத்து தர வேண்டும், அங்கீகா ரம் பெற்ற விசுவாஸ் அவென்யூ பகுதி மக்கள், பயன்படுத்தும் சாக் கடை நீரை சிவசக்தி நகர் பகுதி யில் விடுவதால், அப்பகுதி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர் உடன டியாக மாற்று ஏற்பாடு செய்து தர  வேண்டும் என கூறினார்.

அய்யாவு பேசுகையில், சாலை பாளையத்தில் பழுதடைந்த செக் டேமை சீரமைத்து தர வேண்டும்,  அருந்ததியர் சமுதாயம் பயன்படுத் தும் நல்லகட்டிபாளையம், குப் பாண்டம்பாளையம்   மயானங்க ளுக்குச் செல்லும் வழி, மண் பாதை யாக உள்ளது. இதனை காங்கிரட்  சாலையாக மாற்றித்தர வேண் டும்.

குப்பாண்டபாளையத்தில் பழு தடைந்த  மேல்நிலைத் தொட்டியை  சீரமைத்து தர வேண்டும் அல்லது புதிதாக மேல்நிலைத் தொட்டி கட்டி  தர வேண்டும் என கேட்டுக் கொண் டார்.