திருப்பூர் ஜூன் 11 - 45 நாட்களுக்கு மேலாக குடிநீர் விநியோகம் செய்யப்படாத நிலை யில், ஆற்று குடிநீர் வழங்க வேண்டும் என வலியுறுத்தி நடுப்பட்டி ஊராட்சி அலுவலகத்தை முற்றுகை இட்டு பொதுமக்கள் காலி குடங்களுடன் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியம், நடுப்பட்டி ஊராட்சி, முகாசி பல்லக வுண்டன்பாளையம், எம்.தொட்டிய பாளையம், தென்றல் நகர், சொட்ட கவுண்டன்பாளையம் உள்ளிட்ட ஊர் களுக்கு 45 நாள்களாக குடி தண்ணீர் விநியோகம் செய்யப்படாமல் இருக் கிறது. இதனால் பொதுமக்கள் கடு மையாக பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக தேசிய நெடுஞ்சாலை யில் நடைபெற்று வரும் கெயில் கேஸ் பைப் லைன் குழாய் பதிப்பு பணிக ளால், புதிய கொடிவேரி திட்ட குடிநீர் குழாய்கள் அனைத்தும் சேதம் அடைந்து விட்டது.
நெடுஞ்சாலை யில் குறுக்கே செல்லுகிற இந்த குழாய் இணைப்புகளை சரி செய் யாத காரணத்தால் கடந்த 45 நாட்க ளாக குடிநீர் சப்ளை இல்லை என பொதுமக்கள் வேதனை தெரிவிக் கின்றனர். அன்றாட கூலி உழைப்பா ளிகள் எவ்வாறு வாழ்க்கை நடத்து வது என்று கேட்கின்றனர். இதை சரி செய்ய வேண்டிய ஊராட்சி நிர்வா கம், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரி யம், கெயில் கேஸ் பைப்லைன் போடு கிற ஒப்பந்ததாரர் ஆகியோர் பிரச்ச னையை ஆறப்போட்டு அலட்சியப்ப டுத்தி வருவது கண்டிக்கத்தக்கது.
இதனால் பாதிக்கப்பட்ட பொது மக்கள் பல்லகவுண்டன்பாளைய லுள்ள நடுப்பட்டி பஞ்சாயத்து அலு வலகத்தில் காலி குடங்களுடன் முற் றுகையிட்டு போராட்டத்தை செவ் வாய்க்கிழமை காலை முதல் நடத்தி வருகின்றனர். மாவட்ட நிர்வாகம், குடிநீர் வடிகால் வாரியம், ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் உடன டியாக தலையிட்டு, நடுப்பட்டி ஊராட்சி, எம்.தொட்டிபாளையம் தென்றல் நகர், சொட்ட கவுண்டன்பா ளையம் உள்ளிட்ட கிராமங்களுக்கு சீரான ஆற்றுக் குடிநீர் சப்ளை செய்ய உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டு மென ஊர்ப் பொதுமக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.