அவிநாசி, டிச.11- பாரதியாரின் பிறந்தநாளை முன்னிட்டு புதனன்று அவிநா சியில் உள்ள பாரதியின் சிலைக்கு மாலை அணிவித்து மரி யாதை செய்யப்பட்டது.
மகாகவி பாரதியாரின் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழ் நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் அவி நாசி நிர்வாகி சம்பத்குமார், நல்லது நண்பர் அறக்கட்டளை ரவிக்குமார், செந்தில், பேரூராட்சி மன்ற உறுப்பினர் கோபா லகிருஷ்ணன் உள்ளிட்டோர் அவிநாசி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள பாரதியின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
அதேபோல் அவிநாசி அரசு கலைக்கல்லூரியில் பாரதி யின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. இதில் பேராசிரியர் மணிவண்ணன், மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.