திருப்பூர், ஜூலை 16 - அனுப்பர்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் போதுமான ஆசிரியர்கள் இல் லாததால் 10ஆம் வகுப்பு தேர்வில் 160க்கும் மேற்பட்ட மாணவர்கள் தோல்வி அடைந் துள்ளனர். எனவே போர்க்கால அடிப்படை யில் மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரி யர்களை நியமிக்க வேண்டும் என மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் செவ்வா யன்று மாவட்ட கல்வி அலுவலரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
வேலம்பாளையம் நகரச்செயலாளர் ச.நந்தகோபால் திருப்பூர் மாவட்ட கல்வி அலுவலரிடம் அளித்த மனுவில் கூறியிருப்ப தாவது, அனுப்பர்பளையத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 2024 - 2025ஆம் ஆண் டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. தற்போது 1100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் இப்பள்ளியில் பயின்று வருகின்றனர். மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்கள் எண் ணிக்கை இல்லை எனத் தெரிகிறது. சுமார் 50 ஆசிரியர்கள் இருக்க வேண்டிய இப்பள் ளியில் தற்போது 28 பேர் மட்டுமே உள்ள னர். அதில், பொதுக் கலந்தாய்வின் மூலம் 9 ஆசிரியர்கள் வேறு பள்ளிகளுக்கு மாற்ற லாகிச் செல்கின்றனர் என்றும் தெரிகிறது. எனவே வெறும் 19 ஆசிரியர்களையும், ஒரு சில பிடிஏ ஆசிரியர்களையும் கொண்டு இப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு கல்வி யையும், ஒழுக்கத்தையும், கட்டுப்பாட்டை யும் கற்பிப்பது இயலாதது. தமிழாசிரியர் இல்லாத ஒரு தமிழ்வழிக் கற்றல் பள்ளி யாக இது இருக்கிறது. அறிவியலுக்கும். கணிதத்துக்கும், சமூக அறிவியலுக்கும் கூட ஆசிரியர்கள் இல்லை என்றால் அந்த பாடங்களை மாணவர்கள் பயில்வது எவ் வாறு? 2023 - 2024ஆம் கல்வியாண்டில் நடந்து முடிந்த 10ஆம் வகுப்பு பொதுத் தேர் வில் 160க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெறா மல் போன தற்கான அடிப்படைக் காரணங்களில் இதுவும் ஒன்று.
வறுமையின் காரணமாக கல்வி பெற முடியாமல் ஒரு மாணவரும் விடுபடக்கூ டாது என்ற தமிழ்நாடு அரசின் கல்வி முயற்சி களின் காரணமாக அரசுப்பள்ளிகளில் மாண வர் சேர்க்கை அதிகரித்து வருகிறது. அதேச மயம் அதிகரிக்கும் மாணவர் எண்ணிக் கைக்கு ஏற்ப ஆசிரியர்கள் கூடுதலாக நிய மிப்பது தான் கற்றல் திறனை அதிகரிக்கும். இல்லாவிட்டால் மாணவர்களிடையே பல் வேறு சமூக சிக்கல்களை ஏற்படுத்தி கொண் டிருக்கிறது என்பதை இப்பள்ளியின் அரு கமைப் பகுதி மக்களும் பல்வேறு தொடர் பிரச்சனைகள் ஏற்பட்டு வருவதை காவல் துறையினரும் எதிர்கொள்கின்றனர். எனவே, அனுப்பர்பாளையம் அரசு மேல் நிலை பள்ளியில் 1200 மாணவர்களுக்கு ஏற்ற கூடுதல் ஆசிரியர்களை போர்க்கால அடிப் படையில் நியமிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர்.
மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட கல்வி அலுவலர் பாலமுரளி உரிய நடவ டிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இந்நி கழ்வில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.ரங்க ராஜ் உடன் பங்கேற்றார்.