திருப்பூர், ஜூலை 4 - திருப்பூரில் உள்ள பெரும்பாலான பனி யன் தொழிற்சாலைகளில் தொழிலாளர் நலச் சட்டங்கள் மற்றும் தொழிற்சாலை சட்டங் களை முழுமையாக அமல்படுத்துவதில்லை. இந்த தொழிற்சாலைகள் மீது சம்பந்தப்பட்ட அரசுத் துறைகள் மூலம் சட்டப்படி நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து பனியன் தொழிற்சங்கங்கள் வலியுறுத்தி உள் ளன.
திருப்பூர் மாவட்ட அனைத்து பனியன் தொழிற்சங்கங்கள் கூட்டம் வியாழனன்று.காலை 11 மணிக்கு பி.என் ரோடு ஏஐடியுசி அலுவலகத்தில் ஏஐடியுசி பனியன் சங்கப் பொதுச் செயலாளர் என்.சேகர் தலைமை யில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிஐடியு பனியன் சங்க பொதுச் செயலாளர் ஜி.சம்பத், எல்.பி.எப் பனியன் சங்கத்தின் தலைவர் ஜி. பாலசுப்பிரமணியம், பொருளாளர் பூபதி, ஐஎன்டியூசி பனியன் சங்கத் தலைவர் அ.பெரு மாள், மாவட்டச் செயலாளர் அ.சிவசாமி, எச் எம்எஸ் பனியன் சங்க பொதுச் செயலாளர் ஆர்.முத்துசாமி, எம்எல்எப் பனியன் சங்கத் தலைவர் மு.சம்பத்,,செயலாளர் மனோகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத் தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வரு மாறு:
திருப்பூர் மாவட்டத்தில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பனியன் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. 5 லட்சத்திற்கும் அதிக மான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகி றார்கள். மேற்கண்ட நிறுவனங்களில் ஒரு சில கம்பெனிகள் தவிர மற்ற கம்பெனிகளில் முழு மையாக தொழிலாளர் நலச் சட்டங்கள். தொழிற்சாலை சட்டங்கள் அமல்படுத்துவ தில்லை. எனவே தொழிலாளர் மற்றும் தொழிற்சாலை சட்டங்களை அமல்படுத்துவ துவதற்கு தேவையான நடவடிக்கைகளை தொழிலாளர் துறை மேற்கொள்ள வேண் டும்.
பெரும்பாலான கம்பெனிகளில் இ.எஸ்.ஐ., பி.எஃப்., பிடித்தம் செய்வது இல்லை. அவற்றை ஆய்வு செய்து பீஸ் ரேட், காண்டாக்ட் தொழிலாளர்கள் உட்பட அனைத்து பிரிவு தொழிலாளர்களையும் இ.எஸ்.ஐ., பி.எஃப்., திட்டத்தில் இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பனியன் தொழிற்சாலைகளில் சட் டப்படியான வேலை நேரத்தை அமல்படுத்து வதுடன், ஓவர் டைம் வேலைக்கு சட்டப்படி இரட்டிப்பு சம்பளம் வழங்க வேண்டும் . சட்ட விரோதமாக காண்ட்ராக்ட் முறையில் தொழி லாளர்களை பணியமர்த்தி உள்ள பனியன் நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இ.எஸ்.ஐ. மருத்துவமனை திருப்பூரில் படுக்கை வசதிகளுடன் கட்டி முடிக்கப்பட்டு, திறப்பு விழா நடைபெற்றும் இன்று வரை பயன்பாட்டிற்கு கொண்டு வரா மல் உள்ள இ.எஸ்.ஐ., மருத்துவமனையை உடனடியாக செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். இ.எஸ்.ஐ., பி.எப்., குறித்து தொழி லாளர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண குறை தீர்ப்பு கூட்டங்கள் நடத்த வேண்டும். மேற்கண்ட கோரிக்கை குறித்த மனுக்கள் மாவட்ட ஆட்சியர் மற்றும் தொழி லாளர் துறை அதிகாரிகளுக்கு வழங்குவது என்று முடிவுகள் எடுக்கப்பட்டது.