districts

img

அளவுக்கு அதிகமாக கற்களை ஏற்றி வந்த லாரி சிறைபிடிப்பு

திருப்பூர், டிச.7- திருப்பூர் மாவட்டம் காங்கேயம் வட் டம் மறவபாளையம் ஊராட்சி, செம் மண்குழிப்பாளையம் பகுதியில் அள வுக்கு அதிகமாக கற்களை ஏற்றி வந்ததா கக் கூறி லாரி ஒன்றை அப்பகுதி மக்கள்  சிறை பிடித்தனர்.

காங்கேயம் வட்டம், கீரனூர் பகுதி யில் கல்குவாரி செயல்பட்டு வருகிறது.  இந்நிலையில், சனியன்று இந்த கல்கு வாரியில் இருந்து, செம்மண்குழிப்பா ளையம் சாலை வழியாக ஈங்கூர் பகு திக்கு கற்களை ஏற்றிக் கொண்டு டிப்பர்  லாரி ஒன்று சென்றுள்ளது. அளவுக்கு அதிகமாக கற்கள் ஏற்றிக் கொண்டு வரு வதை கண்ட அப்பகுதி மக்கள், அந்த லாரியை சிறைப் பிடித்துள்ள னர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த குவாரி உரிமையாளர், புதிய ஓட் டுநர் தெரியாமல் அளவுக்கு அதிகமாக  ஏற்றி வந்துவிட்டார். மீண்டும் கற்களை குவாரியில் கொட்டிவிடுவதாக கூறி னார். இதையடுத்து லாரி விடுவிக்கப் பட்டது

இதுகுறித்து அப்பகுதியினர் தெரி விக்கையில், பொதுவாக ஒரு குவாரி யில் கற்களை எடுத்து செல்ல பல விதி முறை வகுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக  ஒரு பகுதியில் இருந்து இன்னொரு பகு திக்கு கற்களை ஏற்றிச் செல்லும் வாக னத்தின் ஓட்டுநரிடம் சிறு வகை கனிமம் அனுப்புகை சீட்டு இருக்க வேண்டும். அந்த சீட்டு திருத்தப்பட்டோ, மேலே எழுத்தப்பட்டோ இருக்கக்கூடாது. மேலும், அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக கற்கள் ஏற்றி செல்லக்  கூடாது என விதிகள் உள்ளன. கல்குவா ரிகள் அதிகம் உள்ள பகுதிகளில் கனிம  வளத்துறை சோதனை மேற்கொண்டு, விதிகளுக்கு புறம்பாக அதிகமாக கற்களை வெட்டி எடுப்பது, அளவுக்கு அதிகமாக ஏற்றி செல்பவர்கள் மீது நட வடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.