திருப்பூர், ஜூலை 17 - திருப்பூர் சிவில் இன்ஜினி யர்ஸ் அசோசியேசன் சார்பில் 19 ஆவது கண்ஸ்ட்ரோ மெகா 2024 கண்காட்சி ஜூலை 19 முதல் 22 ஆம் தேதி வரை நான்கு நாட்கள் நடை பெறுகிறது.
திருப்பூர் மங்கலம் ரோடு கே. என்.எஸ்.கார்டனில் உள்ள திருப்பூர் சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேசன் அலுவலகத்தில் செவ்வாயன்று செய்தியாளர் சந் திப்பு நடைபெற்றது. இதில் சங்கத் தலைவர் அருண் கே.ராமசாமி, கண்காட்சித் தலைவர் வி.ஜனார்த்த னன் ஆகியோர் கூறியதாவது:
திருப்பூர் சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேசன் வெள்ளிவிழா ஆண்டில் பயணித்துக் கொண்டி ருக்கிறது. இந்த ஆண்டு 19ஆவது கண்ஸ்ட்ரோ மெகா 2024 கண் காட்சி திருப்பூர் தாராபுரம் சாலை வித்யா கார்த்தி திருமண மண்டபத் தில் ஜூலை 19ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை நான்கு நாட்கள் நடத்தப்படுகிறது.தமிழகம், இந்தி யாவில் கட்டுமானப் பொருட்கள் தயாரிப்பு, விற்பனையில் சிறந்து விளங்கும் 200க்கும் மேற்பட்ட நிறு வனங்கள் பங்கேற்கின்றன. கட்டிட கட்டுமானத்திற்குத் தேவையான செலவு குறைவாக ஆகக் கூடிய புதிய வகை பொருட்கள் ஏராள மான உள்ளன. பசுமை கட்டுமானம் சார்ந்த செங்கல், கம்பி, சிமெண்ட், ரெடிமேட் கான்கிரீட், மரம் மற்றும் மரம் சார்ந்த பொருட்கள், டைல்ஸ், கிரானைட், மார்பிள்ஸ், உட்டன் ப்ளோரிங், மாடர்ன் எலக்ட்ரிகல் பிளம்பிங் மெட்டீரியல்ஸ், புதிய வகை மின் விளக்குகள், அலங்கார விளக்குகள், சிசிடிவி கேமிரா, நவீன ஹோம் ஆட்டோமேஷன், ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் வகைகள், பேவர் பிளாக், சோலார், லாக்கர், பலவித கண்ணாடி வகைகள், புதிய பெயிண்ட் வகைகள், நியூ பாத் பிட்டிங் உள்ளிட்ட பொருட்கள் இடம் பெறுகின்றன.
புதிய தொழில்நுட்ப முன்னேற் றங்களை கட்டுமான உபகரணங் கள் மற்றும் சாத்தியக்கூறுகளை பொறியாளர்களுக்கும், பொது மக் களுக்கும், தொழில் துறையின ருக்கும் அறிமுகப்படுத்துவது, தரத்தை உயர்த்துவது தான் இக் கண்காட்சி நடத்துவதன் நோக்கம் என்று தெரிவித்தனர்.
தினமும் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறும் கண் காட்சியில் பார்வையாளர்களுக்கு அனுமதி இலவசம். மாலை 6 மணி முதல் 8 மணி வரை கலை நிகழ்ச்சி கள் நடைபெறுகின்றன. கட்டிடப் பொருட்கள் தரத்தை இக்கண்காட் சியில் இலவசமாகப் பரிசோதனை செய்து கொள்ளலாம். அத்துடன் காலை 11 மணி முதல் 7 மணி வரை கட்டட கட்டுமானம் தொடர்பான சந் தேகங்களுக்கு இலவச ஆலோ சனை பெற்றுக் கொள்ளலாம் என்று அவர்கள் தெரிவித்தனர்.
இக்கண்காட்சியின் நிறைவு நாளான ஜூலை 22ஆம் தேதி தமிழ் நாடு, புதுவை சிவில் இன்ஜினி யர்ஸ் சங்கங்கள் கூட்டமைப்பின் மண்டல மாநாடு இங்கு நடத்தப்படு வதாகவும் சங்கத்தின் மண்டலத் தலைவர் சௌ.ஸ்டாலின் பாரதி தெரிவித்தார்.
இந்நிகழ்வில் சங்கச் செயலா ளர் ஜி.ஜார்ஜ் லியோ ஆனந்த், கண் காட்சிச் செயலாளர் ஆர்.கௌதம், கண்காட்சி பொருளாளர் எஸ்.சம் பத்குமார், உடனடி முன்னாள் தலை வர் எஸ்.ஜெயராமன் ஆகியோர் உடனிருந்தனர்.