திருப்பூர் ஜூலை 14- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் முதுபெரும் தலைவருமான தோழர் என்.சங்கரய்யாவின் 103 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில் கொடியேற்று விழா நடத்தப்பட்டது.
இந்திய சுதந்திரப் போராட்ட வீர ரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் முதுபெரும் தலைவரும், தகை சால் தமிழருமான தோழர் என்.சங்க ரய்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு திருப்பூர் மாநகரம், தாராபுரம், காங் கேயம் உள்ளிட்ட பல்வேறு பகுதிக ளில் மார்க்சிஸ்ட் கட்சியினர் கொடி யேற்றி விழா நடத்தினர். திருப்பூர் வடக்கு ஒன்றியத்தில் பெருமாநல் லூர், பாண்டியன் நகர், பிச்சம்பா ளையம் புதூர், ஸ்ரீநகர், திருக்குமரன் அடுக்குமாடி குடியிருப்பு, நெருப் ப்பெரிச்சல், வாவிபாளையம், சேடர் பாளையம் தோட்டத்துப்பாளையம், ஜி.என்.கார்டன், கூலிபாளையம், ஜெ.ஜெ.நகர், சமத்துவபுரம், குருவா யூரப்பன் நகர், எஸ்.ஆர்.வி.நகர், வெங்கமேடு, பரமசிவம்பாளையம், முட்டியன் கிணறு, வலசுப்பாளை யம், கருக்கங்காட்டு புதூர், புதிய திருப்பூர், காந்திநகர், சக்தி நகர் ஆகிய பகுதிகளில் கொடியேற்று நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கட்சி யின் மாவட்டச் செயலாளர் எஸ்.முத் துகண்ணன், ஒன்றியச் செயலாளர் ஆர்.காளியப்பன், மாவட்டக்குழு உறுப்பினர் ஆ.சிகாமணி, முன்னாள் ஒன்றியச் செயலாளர் கே.பழ னிச்சாமி, ஒன்றியக்குழு உறுப்பி னர்கள் மற்றும் கிளை செயலாளர் கள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
அதேபோல் ஞாயிறன்று காங்கே யம் பேருந்து நிலையம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் காங்கேயம் தாலுகாக்குழு சார்பில் கொடியேற்று விழா நடைபெற்றது. கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப் பினர் கே.ரங்கராஜ் செங்கொடியை ஏற்றி வைத்து, சிறப்புரையாற்றினார். தாராபுரத்தில் சிபிஎம் தாலுகாக்குழு அலுவலகத்தின் முன்பாக தோழர் என்.சங்கரய்யாவின் 103 ஆவது பிறந்த தின கொடியேற்று விழா எழுச்சியுடன் நடைபெற்றது. செங் கொடியை மூத்த தோழர் எஸ். பொன்னான் ஏற்றி வைத்தார். இதைத்தொடர்ந்து மாணவர்க ளுக்கு நோட்டு, புத்தகங்கள் வழங் கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் சிபிஎம் தாலுகாச் செயலாளர் என்.கனகராஜ், ராஜேந்திரன், மணியன், பொன்னு சாமி மற்றும் கட்சி அணியினர் ஆர்வத்துடன் கலந்து கொண்ட னர். திருப்பூர் தெற்கு ஒன்றியத்திற் குட்பட்ட ஜெய் நகர், வீரபாண்டி, பெரியாண்டிபாளையம், இடுவாய் உள்ளிட்ட பகுதிகளிலும் தோழர் என்.சங்கரய்யாவின் பிறந்தநாள் கொடியேற்று விழா நடைபெற்றது. இதில் கட்சியின் ஒன்றியச் செயலா ளர் சி.மூர்த்தி, மாவட்டக்குழு உறு ப்பினரும், இடுவாய் ஊராட்சி மன்றத் தலைவருமான கே.கணேசன், ஒன்றி யக்குழு உறுப்பினர்கள் கிளைச் செய லாளர்கள் உள்ளிட்ட கட்சி அணியி னர் பங்கேற்றனர்.
திருப்பூர் வடக்கு மாநகரத்திற் குட்பட்ட பாப்பநாயக்கன்பாளை யம், கோல்டன் நகர், என்.ஆர்.கே.புரம், முத்து நகர் ஆகிய கிளை களில் கொடியேற்றும் நிகழ்ச்சி பறை இசை முழங்க நடைபெற்றது. திருப்பூர் தெற்கு மாநகரத்திற்குட் பட்ட கருவம்பாளையம், ராயபுரம், மிசின் வீதி ஆகிய கிளைகளில் சிபிஎம் கொடியேற்றும் விழா நடை பெற்றது. இந்நிகழ்வில் தெற்கு மாநகரச் செயலாளர் டி.ஜெயபால், மாநகரக்குழு உறுப்பினர்கள் ஜி. செந்தில்குமார், எஸ்.பானுமதி, கிளைச் செயலாளர்கள் ஐ.லாரன்ஸ், ஜி.சுரேஷ் குமார், ஏ.செல்லமுத்து, ஆட்டோ சங்க மாவட்டத் தலைவர் டி.வி.சுகுமார், செயலாளர் எஸ்.சிவராமன், பொதுத் தொழிலாளர் சங்க நிர்வாகி பாலசுப்பிரமணியம் மற்றும் பலர் பங்கேற்றனர். இதே போல மாவட்டத்தில் பல்வேறு இடங் களில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில், பலர் கலந்து கொண்டனர்.