districts

img

பெண் பலி

வாணியம்பாடி, நவ.11- திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே நிம்மியம்பட்டு கிராமத்தில் வசிப்பவர் முரளி. இவர் அதே பகுதியில் அரிசி ஆலை நடத்தி வருகிறார். இவரது மனைவி கன்னிகா பரமேஸ்வரி. இவர் இருணாப்பட்டு பகுதியில் உள்ள நூலகத்தில் நூலகராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், நூலகம் விடுமுறை என்பதால் கன்னிகா பரமேஸ்வரி அரவை மில்லில் தானியங்களை அரைத்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவரது துப்பட்டா இயந்திரத்தில் சிக்கி இழுத்துச் செல்லப்பட்டதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆலங்காயம் காவல் துறையினர் சடலத்தை மீட்டு பிரத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

;