districts

img

புல்லூர் தடுப்பணையில் குளிக்க சென்ற இருவர் பலி

திருப்பத்தூர் அக் 9 - திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த புல்லூர் பகுதியில் ஆந்திரா அரசு பாலாற்றின் குறுக்கே கட்டியுள்ள தடுப்பணை பகுதியில் வாணியம்பாடி நியுடவுன் மற்றும் திருவள்ளுவர் நகர் பகுதி சேர்ந்த இலியாஸ் அஹமத்(45), உஜைர் பாஷா (17), உவேஸ் அஹமத் (16), ராகில் பயஸ் (22), ஆகிய 4 பேர் குளிக்க சென்றுள்ளனர். அப்போது தடை செய்யப்பட்ட தடுப்பணை பகுதியை கடந்து நால்வரும் வனப்பகுதிக்குள் குளிக்கச் சென்றுள்ளனர். செல்லும் வழியில் அணையில் இறங்கிய போது கால் வழுக்கிய தால் உஜைர் பாஷா நீரில் விழுந்து மூழ்கினார். இதனை தொடர்ந்து இலி யாஸ் அஹமத் நீரில் குதித்து அவரை காப்பாற்ற முயன்ற போது அவரும் நீரில் மூழ்கினார். இதைபார்த்த மற்ற இருவர் கூச்சலிட்டுள்ளனர். சத்தம் கேட்டு  அக்கம் பக்கத்தினர் உடனடி யாக ஆந்திர காவல்துறை யினருக்கு தகவல் அளித்த தின் பேரில் விரைந்து சென்ற காவலர்கள் பொதுமக்களுடன் இணைந்து நீரில் மூழ்கிய 12 ஆம் வகுப்பு பள்ளி மாண வன்  உஜைர் பாஷா மற்றும் இலியாஸ் அஹமத் ஆகியோரது சடலத்தை மீட்டனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக குப்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.