திருப்பத்தூர், மார்ச் 23- பால் கொள்முதல் விலையை உயர்த்தக்கோரி தமிழ்நாடு பால் உற்பத்தி யாளர்கள் சங்கம் சார்பில் திருப்பத்தூர் தாலுக்கா அலுவலகம் எதிரில் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பால் உற்பத்தியாளர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் கோபு தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் குழந்தை களின் சத்துணவில் பால் மற்றும் பால் பவுடர் வழங்க வேண்டும், ஆரம்ப சங்க பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. இதில் மாநில பொதுச் செயலாளர் முகமது அலி, சங்கத்தின் மாவட்ட பொது செயலாளர் ரமேஷ் பாபு, செயலாளர் சிவாஜி மாவட்ட விவசாய சங்க செயலாளர் சக்தி வேல்,சிஐடியு அமைப்பாளர் கேசவன் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான பால் உற்பத்தியாளர்கள் கலந்து கொண்டனர்.