districts

களக்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள்

திருநெல்வேலி,மே 20- களக்காடு தலை யணையில் தண்ணீர் அதிகரித்துள்ளதால் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளது. களக்காடு தலை யணையில் கோடை காலம் தொடங்கி யதும் வெயில் சுட்டெரித்ததையடுத்து கடும் வெப்பம் நில வியது. கடும் வெப்பத்தால் தண்ணீர் வற்றி வந்தது. இதனிடையே கடந்த 2 நாட்களாக களக்காடு மேற்கு  தொடர்ச்சி மலையிலும், ஊர் பகுதிகளிலும் சாரல் மழை பெய்து வருகிறது.இந்த மழையினால் தலையணை யில் தண்ணீர்வரத்து அதிகரித்தது. தடுப் பணையை மூழ்கடித்த வாறு தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. இதையடுத்து சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.

;