districts

img

பெண்களின் திறன் மேம்பாடு மூலமாகவே இந்தியா வளர்ந்த நாடாக மாற முடியும்! இஸ்ரோ விஞ்ஞானி நிகார் ஷாஜி பேச்சு

திருநெல்வேலி,  ஜூலை 29 - பெண்களின் திறன் மற்றும் மேம்பாட்டின் மூலமே இந்தியா வளர்ந்த நாடாக மாற முடியும் என்று இஸ்ரோ விஞ்ஞானி நிகார் ஷாஜி பேசியுள்ளார்.

திருநெல்வேலி அன்னை  ஹாஜிரா தனியார் பெண்கள் கல்லூரியின் 16-ஆவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில், இஸ்ரோ வின் ‘ஆதித்யா எல் 1 (Aditya L1)’  திட்ட இயக்குநர் நிகார் ஷாஜி சிறப்பு  விருந்தினராகப் பங்கேற்று பேசி யிருப்பதாவது:

“பெண் கல்வி மற்றும் அதிகா ரம் ஆகியவை சமூகத்தை வடிவ மைக்கின்றன. நூற்றாண்டுகளாகவே ஆண்களுக்கு பின்தங்கியவர்களா கவே பெண்கள் பல வழிகளில் இருந்துள்ளனர். வாக்களிப்பதற்கு, சொந்தமாக சொத்துக்கள் வாங்கு வதற்கு, சுயதொழில் அல்லது சொந்த மாக பணி செய்வதற்கு பெண்கள் அனுமதிக்கப்படாமல் இருந்து வந்த னர்.

என்னுடைய அனுபவத்தில் ஒன்றை பகிர்ந்து கொள்கிறேன். நான்  பெண் என்ற ஒரே காரணத்திற்காக மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிப் பதற்கான அனுமதி மறுக்கப்பட்டது. பெண்களுக்கு பல பகுதிகளில் தற்போதும் அதிகாரம் மற்றும் அனு மதி இல்லாமல் இருந்து வருகிறது.

ஒரு ஆண் கல்வி அறிவைப் பெறும் பொழுது தனிநபரின் கல்வியறிவு உயர்கிறது. அதே, ஒரு பெண் கல்வி அறிவை பெறும்போது ஒரு குடும்பத்தின் கல்வி  அறிவு பெருக்கம் அடை கிறது. தற்போதைய நிலை யில், பெண்களின் கல்வி அறிவு 77 சதவிகிதமாகவும், அதே நேரத்தில் ஆண்களின் கல்வியறிவு 85 சதவிகிதத்திற்கு மேலாகவும் இருந்து வருகிறது.

கல்வி என்பது பெண்களின் உரி மைகள், கண்ணியம் மற்றும் பாது காப்பிற்காக அதிகம் பயன்படுகிறது. சமத்துவமின்மை செயல்பாட்டை கல்வி குறைப்பதுடன் குடும்பத்தின் நிலையை மேம்படுத்துவதற்கான வழி முறையை வகுக்கிறது. படித்த பெண்கள் பொருளாதாரத்தில் குறிப் பிடத்தக்க பங்களிப்பை வழங்குகின்ற னர். பெண்களின் திறன் மற்றும் மேம்பாட்டின் மூலமே இந்தியா வளர்ந்த நாடாக மாற முடியும். 

பேராசிரியர் விக்ரம் சாராபாய், திருவனந்தபுரத்திற்கு அருகில் உள்ள  சிறிய மீன்பிடி குக்கிராமமான தும்பா வில் விண்வெளி அறிவியல் ஆராய்ச்சி பணிக்கான நிறுவனத்தை அமைப்பதற்கான இடத்தைப் பெற முயற்சிகளை மேற்கொண்டார்.

அங்கு பழமையான மற்றும் புரா தனமான புனித மேரி மேக்தலின் தேவாலயம் இருந்தது. இந்த தேவால யத்தின் பேராயரிடம் விக்ரம் சாரா பாய் விண்வெளி துறை தொடர் பான நோக்கங்களை விளக்கி தெரி வித்தார். அங்குள்ள தேவாலய மக்க ளின் ஒட்டுமொத்த ஆதரவும் இடம் கொடுக்க கிடைத்தது.

அதன் பின்பு, அங்குள்ள தேவாலயம் ராக்கெட் வடிவமைப்பு மையமாகவும், பேராயர் வீடு விஞ்ஞா னிகளின் அறையாகவும் மாற்றப் பட்டது. அதனைத் தொடர்ந்து தான்  விக்ரம் சாராபாய் விண்வெளி மையம்  மற்றும் பல விண்வெளி மையங்கள் உருவாக தொடங்கியது. இன்று இந்திய  விண்வெளி ஆராய்ச்சி துறை உலக நாடுகளும் மதிக்கும் மிகப்பெரிய விண்வெளி மையமாக செயல்படு கிறது.

இந்திய தொழில்நுட்பங்கள் தற்போது உலக அளவில் நிரூபண மாகி வருகின்றன. நமது நாட்டில் ஒரு  தேவாலயம் அறிவியல் ஆராய்ச்சிக் காக வழங்கப்பட்டு, அதன் மூலம்  பல்வேறு சாதனைகள் நிகழ்ந்து உள்ளன. சமூகத்தின் வடிவமைப்பை மதம் மற்றும் ஆன்மீக அமைப்பின் சிறந்த கூற்றுகளால் மாற்ற முடியும் என்பது அதன் மூலம் கிடைக்கப் பெற்றுள்ளது.” 

இவ்வாறு நிகார் ஷாஜி பேசி யுள்ளார்.