திருநெல்வேலி, ஆக.5 - பாளையங்கோட்டை தியாகராஜ நகர் சிஐடியு மின்வாரிய ஓய்வு பெற்றோர் சங்க அலுவலகத்தில் சிஐடியு இந்திய கட்டுமானத் தொழிலாளர் சங்கத்தின் தமிழ் மாநிலக் குழு கூட்டம் திங்கட்கிழ மையன்று நடைபெற்றது.
மாநிலக் குழு கூட்டத்திற்கு சங்க மாநிலத் தலைவர் கே.பி.பெருமாள் தலைமை தாங்கினார். சங்க மாநிலச் செயலாளர் குமார், மாநில பொருளா ளர் லூர்தூ ரூபி, கட்டுமான தொழிலாளர் நல சங்கத்தின் மாநில துணைப் பொதுச் செயலாளர் சுப்பையா ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். சிறப்பு அழைப்பாளராக சங்கத்தின் கௌர வத் தலைவர் ஆர்.சிங்காரவேலு கலந்து கொண்டு பேசினார்.
கட்டுமான பெண் தொழிலாளர் களுக்கு 55 வயதில் பென்ஷன் வழங்க வேண்டும். பென்சனை காலதாமதம் இன்றி வழங்கிட வேண்டும். வீடு கட்டும் திட்டத்தில் 4 லட்சத்தை தடையின்றி உட னடியாக வழங்க வேண்டும். ஆன்லைன் பதிவில் குளறுபடுகளை உடனடியாக சரி செய்ய வேண்டும். கட்டுமான பொருட் கள் விலை உயர்வை குறைத்து ஜிஎஸ்டி வரியை குறைக்க வேண்டும். உதவி தொகைக்கு விண்ணப்பித்தவர் களுக்கு உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.
கூட்டத்தில், சிஐடியு மாநிலக் குழு உறுப்பினர் ஆர்.மோகன், நெல்லை மாவட்டத் தலைவர் பீர் முகம்மதுஷா, மாவட்டச் செயலாளர் ஆர்.முருகன், சிஐடியு கட்டுமானத் தொழிலாளர் நல சங்க மாவட்டத் தலைவர் ஜான் பாஸ்கர், மாவட்ட பொதுச் செயலாளர் சுரேஷ், மாவட்ட பொருளாளர் சங்கரநாராய ணன் உட்பட பலர் கலந்து கொண்ட னர்.