districts

கால்வாயில் வலம் வரும் ராஜநாகம்

திருநெல்வேலி,  செப்.24- 15 அடி நீளம் கொண்ட அந்த ராஜநாகம் இலவடி அணை, வண்ணாந்துரை ஓடை, சீவலப்பேரியான் கால் வாய்களில் வலம் வந்த வண்ணம் உள்ளது. பகல்  நேரங்களிலும் இரை தேடி  வருகிறது. வனப்பகுதியில் இருந்து வெளிவந்த ராஜ நாகம் மீண்டும் வனப்பகு திக்குள் செல்லாமல் இப்பகு தியிலேயே சுற்றி  வருவதால் விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர். மேலும் கால்வாய்களில் குளிக்க வரும் பொதுமக்க ளும் ராஜநாகத்தை கண்டு  அலறியடித்து ஓடுகின்ற னர். இதனால் கால்வாய் களில் குளிக்க செல்லும் பொதுமக்களும், விளை நிலங்களுக்கு செல்லும் விவசாயிகளும் பீதி அடை ந்துள்ளனர். எனவே இந்த ராஜநாகத்தை வனத்துறை யினர் உயிருடன் பிடித்து வனப்பகுதிக்குள் கொண்டு  சென்று விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

;