திருநெல்வேலி மாவட்டத்தில் காதலை கொண்டாடுவோம் நிகழ்ச்சி நடை பெற்றது.
சங்க காலம் தொட்டு காதல் குறித்த உரை யாடல் நம் சமூகத்தில் விவாதிக்கப்பட்டு வரு கிறது. தலைவிக்காக உச்சி மலையில் உருகும் வெண்ணெய் போல தலைவன் உருகியதாக சங்கப் பாடல் கூறுகிறது.
‘காதல் காதல் காதல், இல்லையேல் சாதல் சாதல் சாதல்’ என வாழ்வையும் சாவையும் இணைக்கிறது தமிழ் கவிதை. ‘ஆதலினால் காதல் செய்வீர் உலகத்தீரே’ என பிரகடனம் செய் கிறார் முண்டாசுக் கவிஞர் பாரதி. ஒருவருக்கு ஒருவர் தம்மையே ஒப்புக் கொடுத்தல்தான் காதல் என்கிறார் பாரதி. ஆணாதிக்க, சாதி ஆதிக்க சமூக அமைப்பு முறைக்கு எதிரானது காதல். ஆகவேதான் அது கொண்டாடப்படு கிறது. மறுபுறம் தாக்குதலுக்கு உள்ளாகிறது.
காதல் கொண்டாடப்பட வேண்டிய சமூக நிகழ்வு என்பதை பறைசாற்றும் வகையில் நெல்லை யில் காதலைக் கொண்டாடுவோம் நிகழ்ச்சி நடந்தது.
ஜனநாயக, முற்போக்கு விழுமியங்கள் மீது எப்போதெல்லாம் தாக்குதல் நடைபெறுகிறதோ, அப்போதெல்லாம் முதலில் வெளிப்படுவது, எதிர்வினையாற்றுவது கலைஞர்கள்தான். 2016இல் திரிபுராவில் லெனின் சிலை தகர்க்கப்பட்ட போது, சமூக மாற்ற சிந்தனை கள் மீது விழுந்த பேரிடியாக கருதி களமிறங்கிய வர் ஓவியர் சந்ரு அவர்கள்.
இந்தியாவிலேயே மிகப்பெரிய லெனின் சிலை இப்படித்தான் உருவானது. சங்கரய்யா மறைந்தவுடன், அவர் புரட்சிகர இயக்கத்தின் வரலாறு என்ற உந்துதல் சங்கரய்யா அவர்க ளின் சிலையை வடிக்கும் எண்ணத்தில் நிறைவு பெற்றது. ஆமாம், குருவனத்தில் தோழர் சங்கரய்யா அவர்களின் மார்பளவு சிலை கம்பீரமாய் வீற்றிருக்கிறது. இதோ, காதல் தம்பதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் தாக்கப்பட்டவுடன், காதலைக் கொண்டாடும் நிகழ்வுக்கான சிந்தனை பிறந்தது. காதலித்து திருமணம் செய்த தம்பதிகளுக்கு அழைப்புகள் சென்றன. குரூப்ஸ்கயாவின் காத லில் திளைத்த லெனின் சிலை முன்பாக ஒன்று கூடினர் காதலர்களும், தோழர்களும்.
சாதி நீடித்திருக்க காரணம் அகமண முறை தான் என்று அம்பேத்கர் அழுத்தம் திருத்தமாக சொல்கிறார். எனவேதான் சாதி மறுப்பு திரு மணங்களை சாதிய அமைப்புகள் கடித்து குதறு கின்றன. 40 ஆண்டுகளுக்கு முன் என் அப்பா பார்த்த நிலை, 25 ஆண்டுகளுக்கு முன் நான் பார்த்த அதே நிலைதான் இப்போதும் இந்த மாவட்டத்தில் நீடிக்கிறது என்றார் நிகழ்வில் கலந்து கொண்ட ஆய்வாளர் நிவேதிதா லூயிஸ்.
சாதிய உணர்வுக்கு எதிராக களப் போராட்டங் கள் அவசியத்திலும் அவசியம் என்பதை வலி யுறுத்தினார். காதலை ஓவியமின்றி எப்படி கொண் டாட முடியும். கொண்டாட்டத்தின் துவக்கமாக ஓவியர்கள், காதலை தமது தூரிகையால் குழுமி யிருந்த கூட்டத்தின் நடுவே வரைந்தனர். வண்ணங்கள்தான் எத்தனை அழகானது. ஏழு வண்ணங்களில் மின்னுவதால் தானே வான வில்லும் அழகாகிறது.
ஓவியர்கள் சந்ரு, மணி, மாரியப்பன், புரு சோத்தமன் ஆகியோர் வண்ணங்களை குழைத்து புதிதாய் ஒன்றை படைத்தளித்தனர். புதியம்புத்தூர் ஜாய் இசைக்குழுவின் பேண்ட் வாத்தியம் உற்சாகத்தை உருவாக்கியது. ‘உனக்கும் எனக்கும் காதல் வந்தது, இடையில் எதற்கு சாதி வந்தது’ என கரிசல் கிருஷ்ண சாமியும், தண்டபாணியும் இனிய குரலில் கான மிசைத்தனர்.
கவிஞர்கள் கவிதைகள் வாசித்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் வாழ்த்துரை வழங்கினார். அவர் தனது உரையின் போது, மார்க்ஸ் ஜென்னி மீது கொண்ட காதலை, மார்க்ஸ் எழுதிய கடித வரிகளில் இருந்தும், அம்பேத்கர் ரமாபாய்க்கு எழுதிய கடித வரி களில் இருந்தும் எடுத்துக் காட்டினார். எனது கடு மையான உழைப்புக்கு நடுவே உனது கண்கள்தான் எனக்கு புத்துயிர்ப்பு அளிக்கிறது எனும் மார்க்சின் வரிகள், உலகின் மிகச் சிறந்த காதல் வரிகள். அந்தக் காதலை உணர்ந்தவர் கள், ஜென்னி இறந்த பிறகு மார்க்ஸ் நடைபிண மாக மாறியதை சொல்கிறார்கள். வறுமையின் கோரப் பிடியிலும் லட்சியத்தில் உறுதியாக பய ணிப்பதை அவர்களது காதல்தானே சாத்திய மாக்கியது. மார்க்சும் ஜென்னியும் மானுட சமூகத்தையே காதலித்தனர். அவர்களது காதல் என்றென்றும் சாசுவதமானது; நிலையானது.
“என்னை நீ பிரிந்திருக்கும் துயரை நான் புரிந்திருக்கிறேன். ஆனாலும் நான் கடும் காரியத்தை லட்சியமாக கொண்டு பயணப்படு கிறேன். இந்த சமூகத்தில் பீடித்திருக்கும் பாகு பாடுகளுக்கு எதிராக சமர் புரிய வேண்டியது இருக்கிறது. அதற்காக நமது பிரிவை நாம் ஏற்க வேண்டியது இருக்கிறது”- இது லண்டனில் இருந்து மனைவி ரமாபாய்க்கு அம்பேத்கர் எழுதிய கடித வரிகள். லட்சியத்தையும் காத லையும் பிரிக்க முடியவில்லை. துடிக்கும் இதயம், அன்பைத் தேடுகிறது.
ராட்சசி, கழுவேத்தி மூக்கன் ஆகிய படங் களை இயக்கிய கெளதம் ராஜ் நிகழ்வில் கலந்து கொண்டார். உயர்ந்து நிற்கும் லெனின் சிலை குறித்த தனது ஆச்சரியத்தையும், பெரு மிதத்தையும் பகிர்ந்து கொண்டார். சாதி மறுப்பு திருமணங்களை முன்னெடுக்க வேண்டும் என்றார். கட்சி அலுவலகம் தாக்கப்பட்ட தினத்தை காதலர் கொண்டாட்டமாக தமிழகம் எங்கும் கொண்டாட வேண்டும் என்று அறைகூவல் விடுத்தார். இதுகுறித்து குடிமைச் சமூகம் அதிகள வில் அக்கறை காட்டவில்லை என்று தனது ஆதங்கத்தை கொட்டித் தீர்த்தார்.
நிகழ்விற்கு ஓவியர் சந்ரு தலைமையேற்றார். ஓவியர் ராஜேஷ் வரவேற்புரையாற்றினார். நிகழ்வில் எழுத்தாளர் நாறும்பூநாதன், மருத்து வர் இராமகுரு, எழுத்தாளர் கருப்பு அன்பரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் கே.ஜி.பாஸ்கரன், கட்சியின் நெல்லை மாவட்டச் செயலாளர் ஸ்ரீராம் உள்பட பலரும் கலந்து கொண்டனர்.