திருநெல்வேலி மாவட்டத்தில் தீக்கதிர் சந்தா சேர்ப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருநெலவேலி மாவட்ட நீதிமன்ற வழக்கறிஞர்கள் அளித்த 9ஆண்டு சந்தாக்கள், ஒரு ஆறுமாத சந்தாக்களுக்கான தொகையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் ஆர்.கருமலையானிடம், மாவட்டக்குழு உறுப்பினர் கு.பழனி வழங்கினார். மாநிலக்குழு உறுப்பினர் கே.ஜி.பாஸ்கரன், நெல்லை பதிப்பு மேலாளர் பி.என்.இசக்கிமுத்து, மதுபால், கந்தையா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.