districts

img

கொடுமுடியாறு நீர்த்தேக்கத்திலிருந்து கார் பருவ சாகுபடிக்கு தண்ணீர் திறப்பு

திருநெல்வேலி, ஜூலை 1- நெல்லை மாவட்டம் கொடுமுடி யாறு நீர்த்தேக்கத்திலிருந்து கார் பருவ சாகுபடிக்காக சட்டமன்ற பேரவைத் தலைவர் மு.அப்பாவு, மாவட்ட ஆட்சி யர் கா.ப.கார்த்திகேயன் தலைமை யில் நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் ரூபி.ஆர்.மனோகரன் மற்றும் விவ சாயிகள் முன்னிலையில் திங்களன்று தண்ணீர் திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் மு.அப்பாவு தெரிவித்ததாவது:

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், கொடுமுடியாறு நீர்த்தேக்கத்திலிருந்து நாங்குநேரி மற்றும் இராதாபுரம் வட்டங்களிலுள்ள வள்ளியூரான்கால், படலையார்கால் மற்றும் ஆத்துக்கால் ஆகியவற்றின் மூலம் பாசனம் பெறும் 2548.94 ஏக்கர் பாசன நிலங்களுக்கு கார்பருவ சாகு படிக்காக ஜூலை 1 முதல் அக்.28 வரை  தண்ணீர் திறந்து விட உத்தரவிட்டுள் ளார். 120 நாட்களுக்கு நாள் ஒன்றுக்கு வினாடிக்கு 50 கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறக்கப்பட உள்ளது.

 அணைக்கு கூடுதல் நீர்வரத்து இருக்கும் பட்சத்தில், முன்னுரிமை அளிக்கப்பட்ட 2548.94 ஏக்கர் நிலங் களின் குறைந்தபட்ச தேவைக்கு கூடுத லாக உள்ள நீரினை, வடமலையான் கால் மூலம் பாசனம் பெறும் 3231.97  ஏக்கர் நிலங்களுக்கு நாள் ஒன்றுக்கு வினாடிக்கு 100 கன அடி வீதம் நீர்வரத்து  மற்றும் இருப்பை பொறுத்து தேவைக் கேற்ப தண்ணீர் திறந்து விட உத்தேசிக்கப்பட்டுள்ளது.

 மேலும் எதிர்வரும் நாட்களில் பருவ மழை பொய்த்து எதிர் பார்க்கிற  நீர்வரத்து கிடைக்கப் பெறவில்லை யெனில், இருக்கும் நீரை அனு மதிக்கப்பட்ட பாசன நிலங்கள் முழு மைக்கும் பயன்பெறும் வகையில் சுழற்சி முறையில் வழங்கப்படும். விவ சாயிகள், பொதுமக்கள் நீரை சிக்கன மாக பயன்படுத்தவும் நீர் விநியோக பணியில் நீர்வளத்துறைக்கு ஒத்துழைப்பு தர வேண்டும்.  கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகளுக்கு பயிர்க் கடன் வழங்கப்பட்டு வருகிறது. விவ சாயிகள் பயிர்க் கடன் பெறுவதற்கு வங்கி களில் விண்ணப்பித்து பயன்பெறலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.