புதுக்கோட்டை, ஜூன்.19- நெல்லையில் சாதிமறுப்புத் திருமணம் செய்துகொண்ட தம்பதியருக்கு ஆதரவளித்த தற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு அலுவலகத்தை தாக்கிய சாதி வெறியர்களைக் கண்டித்து புதன்கிழமையன்று பல்வேறு மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுக்கோட்டை சின்னப்பா பூங்கா அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன் தலைமை வகித்தார். கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டத் தலைவர் டி.சலோமி, செயலாளர் சி.ஜீவானந்தம் ஆகியோர் கண்டன உரையாற்றினார்.
மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் எஸ்.சங்கர், ஏ.ஸ்ரீதர், கே.சண்முகம், சி.அன்புமண வாளன், ஜி.நாகராஜன், சு.மதி யழகன், துரை.நாராயணன் மற்றும் ஒன்றியச் செயலாளர்கள், மாவட்டக்குழு உறுப்பினர்கள் உள்பட ஏராளமானோர் பங்கேற்ற னர்.
கும்பகோணம்
கும்பகோணத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாநகரச் செயலாளர் கே.செந்தில்குமார் தலைமை வகித்தார். மாநிலக்குழு உறுப்பினர் எம். ராமகிருஷ்ணன், மாவட்டச் செயலாளர் சின்னை. பாண்டியன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆர். மனோகரன், கே.அருளரசன், மாமன்ற உறுப்பி னர் ஏ.செல்வம் ஆகியோர் பேசினர்.
திருவாரூர்
திருவாரூர் ஒன்றியக்குழு சார்பில் புலிவலம் கடைத்தெரு பகு தியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தி ற்கு ஒன்றியச் செயலாளர் என்.இடும்பையன் தலைமை வகித்தார். மாவட்டக்குழு உறுப்பி னர் ஜி.பழனிவேல், மற்றும் பலர் பங்கேற்றனர்.
கரூர்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூர் மாவட்டக்குழு சார்பில் குளித்தலை பேருந்து நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. குளித்தலை ஒன்றி யச்செயலாளர் இரா.முத்துச் செல்வன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் மா.ஜோதி பாசு கண்டன உரையாற்றினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் கள் பி.ராஜு, சி.ஆர்.ராஜா முகமது, மாவட்டக்குழு, ஒன்றி யக்குழு உறுப்பினர்கள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.