திருநெல்வேலி, ஏப்.2- சஸ்பெண்ட் செய்யப்பட்ட அம்பாசமுத்திரம் ஏஎஸ்பி பல்பீர் சிங் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்ய கோரி நெல்லை சந்திப்பு ரயில் நிலையம் முன்பு அனைத்து கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நெல்லை மாவட்டம் அம்பை பகுதியில் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டவர்களின் பற்களை பிடுங்கியதாக அம்பை ஏஎஸ்பி பல்வீர்சிங் மீது குற்றச் சாட்டு எழுந்தது. இதைத்தொட ர்ந்து அவர் ‘சஸ்பெண்டு’ செய் யப்பட்டார். மாவட்ட நிர்வாகம் சார்பில் சேரன்மகாதேவி துணை ஆட்சியர் முகமது சபிர் ஆலம் தலைமையில் விசாரணை நடந்து வரும் நிலையில் மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை நடத்துகிறது. இதற்காக உதவி எஸ் பி பல்வீர்சிங் திங்கட் கிழமை ஆஜராகுமாறு உத்தரவி டப்பட்டுள்ளது. இந்நிலையில் நெல்லை சந் திப்பு ரயில் நிலையம் அருகே ஞாயிற்றுக்கிழமை காலை சஸ் பெண்ட் செய்யப்பட்ட ஏஎஸ்பி பல்பீர்சிங் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்ய வேண்டும், பணியில் உள்ள நீதிபதியை வைத்து விசாரணை நடத்திட வேண்டும் பாதிக்கப்பட்ட நபர் களுக்கு நீதி கிடைப்பதற்கான ஏற்பாடுகளையும் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் செய்து தர முன்வர வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந் திய கம்யூனிஸ்ட் கட்சி, சி.பி.ஐ. எம்.எல் ,விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சி கள் சார்பில் பல்வீர்சிங்கிற்கு எதி ராக ஆர்ப்பாட்டம் நடந்தது, இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் க.ஸ்ரீராம் தலைமை தாங்கினார், ஆர்ப்பாட்டத்தில் மாநில குழு உறுப்பினர் கே.ஜி. பாஸ்கரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.மோகன், விடு தலைச் சிறுத்தை கட்சி மத்திய மாவட்ட செயலாளர் கரிசல் சுரேஷ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட துணைச் செயலாளர் முத்துகிருஷ்னன்,மார்க்சிஸ்ட் லெலினிஸ்ட் கட்சி மாவட்ட செய லாளர் சுந்தர்ராஜன், மாநில குழு உறுப்பினர் சங்கர பாண்டியன், தமிழர் உரிமை மீட்புகள மாநில ஒருங்கிணைப்பாளர் லெனின் கென்னடி, வழக்கறிஞர்கள் பி.எம். முருகன், கு.பழனி, ஜி.ரமேஷ், ஆரிப் பாட்ஷா ஆகியோர் பேசி னர். ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற் குழு உறுப்பினர் எம்.சுடலை ராஜ், மாவட்ட குழு உறுப்பினர் எஸ்.கே. செந்தில், நெல்லை தாலுகா குழு செயலாளர் நாரா யணன், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாவட்ட செயலாளர் வண்ண முத்து,செல்வராஜ், சி.ஐ.டி.யு ராஜன், திராவிடர் தமிழர் கட்சி மாநில பொதுச் செயலாளர் கதிர வன், திருக்குமரன், இந்திய கம்யூ னிஸ்ட் கட்சி நிர்வாக குழு உறுப்பி னர் சடையப்பன், அலுவலக செய லாளர் முத்துகிருஷ்ணன், நெல்லை மண்டல நிர்வாகி கிருஷ்ணன், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.