districts

img

புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய அமைச்சர்

பெரம்பலூர், செப்.5 - பெரம்பலூர் மாவட்டத்தின் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கு அமைச்சர் அடிக்கல் நாட்டினார். பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சீராநத்தம், நொச்சிக்குளம், திம்மூர், கொளத்தூர், கூடலூர், குரும்பாபாளையம், தெரணி, அயினாபுரம், கொளக்காநத்தம் ஆகிய கிராமங்களில் ரூ. 6.37 கோடி மதிப்பீட்டில் சாலை மேம்பாடு, நீர்நிலைகளை தூர்வாரி ஆழப்படுத்துதல், சிமெண்ட் களம் அமைத்தல் போன்ற பல்வேறு வளர்ச்சித் திட்ட பணிகளுக்கு  போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர், செவ்வா யன்று மாவட்ட ஆட்சியர் க.கற்பகம் தலை மையில் அடிக்கல் நாட்டினார்.  மேலும் இரசுலாபுரம் ஊராட்சியில் ரூ.6.14 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள உயர்மட்டப் பாலத்தினை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். தொ டர்ந்து ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட் பட்ட குரும்பாபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவின் தரம் குறித்து, அமைச்சர் சாப்பிட்டு பார்த்து ஆய்வு  மேற்கொண்டார்.