மயிலாடுதுறை, ஆக.25 - மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம் பாடி அருகேயுள்ள திருக்களாச்சேரி அய்யாஸ் மெட்ரிக்குலேசன் பள்ளி யில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத் தின் சார்பில் ரத்ததான முகாம் நடை பெற்றது. சங்கத்தின் ஒன்றியத் தலைவர் ஜி.கார்த்திகேசன் தலைமை வகித் தார். ஒன்றிய பொருளாளர் எஸ்.ராமச் சந்திரன் வரவேற்றார். முகாமில் சிறப்பு அழைப்பாளர்களாக மயிலாடுதுறை அரசு மருத்துவமனை ரத்த வங்கி அலு வலர் மருத்துவர் அருண் தலைமையி லான மருத்துவ குழுவினர் ரத்த கொடை களை பெற்று, தானம் செய்தவர் களுக்கு சான்றிதழ்கள் வழங்கினர். வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் ஏ.அறிவழகன், திமுக ஒன்றிய செயலா ளர் அப்துல் மாலிக், தொழிலதிபர் இ.எம்.எம் நியாஜிர் அஹமத், அய்யாஸ் மெட்ரிக் பள்ளி நிர்வாக இயக்குநர் அப்துல் பாரி, எம்.அப்துல் ரஹ்மான், தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளர் என்.சந்திரமோகன், திருக்க ளாச்சேரி ஊராட்சி தலைவர் எம்.சம்சாத் ரபீக், தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு மாவட்ட பொருளா ளர் ஆசிக் ரஹ்மான், வாலிபர் சங்க ஒன்றிய செயலாளர் பவுல் சத்திய ராஜ், மாவட்டத் தலைவர் எம். ஐயப்பன், மாணவர் சங்க மாவட்ட தலைவர் அமுல் காஸ்ட்ரோ, மாணவர் சங்க ஒன்றிய செயலாளர் ஆர்.பிரவீன் ஆகியோர் உரையாற்றினர். முகாமில் 30 யூனிட்டுக்கும் மேல் ரத்த தானம் செய்தனர். ஒன்றியக்குழு உறுப்பினர் இளம்வழுதி நன்றி கூறி னார். அறந்தாங்கி புதுக்கோட்டை மாவட்டம் அறந் தாங்கி அருகே கிருஷ்ணாஜிப் பட்டினத் தில் மாபெரும் ரத்த தான முகாம் நடை பெற்றது. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிருஷ் ணாஜிப்பட்டினம் கிளை மற்றும் அறந் தாங்கி அரசு மருத்துவமனை இணைந்து நடத்திய மாபெரும் ரத்ததானம் முகாம் கிருஷ்ணாஜிப்பட்டி னம் தவ்ஹீத் மர்கஸில் நடை பெற்றது. இதற்கு மாவட்டத் தலைவர் சித்திக் ரகுமான் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளரான மணமேல்குடி காவல் ஆய்வாளர் ஜெயமோகன் முகாமை துவக்கி வைத்து உரையாற்றி னார். 41 யூனிட் ரத்தம் கொடையாக பெறப்பட்டு, அறந்தாங்கி அரசு மருத்து வமனைக்கு வழங்கப்பட்டது. ரத்தம் வழங்கிய அனைவருக்கும் அறந்தாங்கி அரசு மருத்துவமனை மருத்துவர் இராதாகிருஷ்ணன் சான்றிதழ்களை வழங்கினார்.