பெரம்பலூர், செப்.23 - பெரம்பலூர், துறைமங்கலம் அன்னை லட்சுமி நினைவரங்கத்தில் இந்திய ஜனநா யக வாலிபர் சங்கத்தின் கிழக்கு மண்டலப் பேரவை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் மாநிலக் குழு உறுப்பினர் ஏ.அறி வழகன் தலைமை வகித்தார். மாநிலச் செய லாளர் ஏ.வி.சிங்காரவேலன், மாநிலத் தலைவர் கார்த்திக் ஆகியோர் விளக்க உரை யாற்றினர். பேரவையில் மயிலாடுதுறை, நாகப்பட்டி னம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, கரூர், திருச்சி மாநகர், திருச்சி புறநகர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். அடிப்படை கோரிக்கைகளை வலியு றுத்தி, திருச்சி மண்டலத்தில் ஆயிரம் இடங் களில் அக்டோபர் 4,5,6, ஆகிய தேதிகளில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. மாவட்டத் தலைவர் எஸ்.கே.சரவணன் நன்றி உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் சக்திவேல், மாவட்டத் தலைவர் சரவணன், மாவட்ட பொருளாளர் அறிவழகன், மாவட்ட துணைச் செயலாளர் கே.வேல்முருகன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் பிரியா மற்றும் மாவட்டக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.